திருப்பூர், டிச. 9 - திருப்பூர் மாநகராட்சியில் கடுமை யாக உயர்த்தப்பட்டுள்ள சொத்து வரியை திரும்பப் பெற வலியுறுத்தி அனைத்துக் கட்சிகள் சார்பில் பெருந் திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருப்பூர் மாநகராட்சி அலுவல கம் முன்பாக திங்களன்று அனைத்துக் கட்சிகள் சார்பாக இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர் மாவட்டச் செயலா ளர், மாமன்ற உறுப்பினர் எஸ்.ரவிச் சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் திருப்பூர் எம்.பி., கே.சுப்பராயன், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா ளர் செ.முத்துக்கண்ணன், காங்கிரஸ் கட்சியின் மாநகர் மாவட்டத் தலை வர் ஆர்.கிருஷ்ணன், கொமதேக மாவட்டத் தலைவர் ரோபோ ரவிச்சந்தி ரன், விசிக வடக்கு மாவட்டத் தலை வர் ஏ.பி.ஆர்.மூர்த்தி, முஸ்லிம் லீக் மாவட்டத் தலைவர் சையது முஸ்தபா, மனிதநேய மக்கள் கட்சி மாவட்டச் செயலாளர் எம்.ஜே.அபு சாலி, மக்கள் நீதி மய்யம் சார்பில் மகேந்திரன் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய தலைவர்கள், கோவை மாநக ராட்சியை விட திருப்பூர் மாநகராட்சி யில் மிக அதிகமாக வரி விதிக்கப் பட்டுள்ளது. ஏற்கெனவே ஒன்றிய அரசின் கொள்கைகளால் திருப்பூர் தொழில் நலிவடைந்துள்ளது. இந்நிலையில் சொத்து வரி உயர்வு கடும் நெருக்கடியை ஏற்படுத்தும். அதேபோல் பாதாளச் சாக்கடைக்கு ஒரே சொத்து வரி விதிப்பில் தனித்தனி வீடுகளுக்கு தனித்தனிக் கட்டணம் வசூலிப்பது, அதேசமயம் மின் கட்டணத்தில் தனித்தனி மீட்டர்கள் இருந்தால் அதை ஒரே இணைப்பாக சேர்ப்பது என்று எந்த நெறிமுறையும் இல்லாமல் செயல்படுகின்றனர்.
ஒன்றிய அரசு 15ஆவது நிதிக்குழு மானியத்தைத் தர மறுத்து கட்ட ணத்தை உயர்த்த நிர்பந்தித்தால் அதை எதிர்த்துப் போராட திமுக முன் வேண்டும். அதை விடுத்து மக்கள் தலையில் வரிச் சுமையை ஏற்றுவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று கூறினர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ் கட்சி, கொமதேக, விடு தலைச் சிறுத்தைகள், முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் சார்பில் மாமன்ற உறுப்பினர்கள், பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் ஆயிரத்திற்கும் மேற்பட் டோர் கலந்து கொண்டனர். இதில் சாய ஆலை உரிமையாளர் சங்கம், அனைத்து வியாபாரிகள் சங்கப் பேரவை நிர்வாகிகள் நேரில் வந்து சொத்து வரி உயர்வுக்கு எதிரான இந்த இயக்கத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.