திருப்பூர், நவ.26- கமுடேசன் பிடித்தம் செய்யும் கால அளவை குறைக்க வேண்டும், மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் காசில்லா மருத்துவத்தை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதி யர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர்.
தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளான பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 70 வயது முடிந்த ஓய்வூதியர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். சத்துணவு, அங் கன்வாடி, வருவாய் கிராம ஊழியர் கள், ஊராட்சி செயலாளர்கள் உள் ளிட்ட தொகுப்பூதிய ஓய்வூதியர்க ளுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.7850 வழங்க வேண்டும். மருத்து வக் காப்பீட்டு திட்டத்தில் “காசில்லா மருத்துவம்” என்பதை உறுதிப்ப டுத்த வேண்டும். மருத்துவ செல வுத் தொகையினை திரும்பப்பெற நீண்ட காலமாக தேங்கியுள்ள மனுக் களுக்கு, முத்தரப்பு பேச்சுவார்த்தை யின் மூலம் தீர்வு காண வேண்டும். கமுடேசன் பிடித்தம் செய்யும் கால அளவினை 10 ஆண்டுகளாக குறைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்துத்துறை ஓய்வூதியர் சங் கத்தினர் செவ்வாயன்று ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலு வலகம் முன்பு நடைபெற்ற தர்ணா போராட்டத்திற்கு, ஓய்வூதியர் சங்க மாவட்டத் தலைவர் க.சண்முகம் தலைமை ஏற்றார். மாநில துணைத் தலைவர் அரங்கநாதன் துவக்கவுரை யாற்றினார். மாவட்டச் செயலாளர் சோ.பாலகிருஷ்ணன் கோரிக்கை களை விளக்கி பேசினார். சிஐடியு மாவட்டச் செயலாளர் கே.ரங்கராஜ், அரசு ஊழியர் சங்க மாவட்டச் செய லாளர் மா.பாலசுப்பிரமணியம், ஓய்வுபெற்ற ஆசிரியர் நல அமைப் பின் மாவட்டத் தலைவர் எம்.நாட் ராயன் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசி னர். அரசு ஊழியர் சங்க முன்னாள் மாநிலச் செயலாளர் அ.நிசார் அக மது நிறைவுரையாற்றினார். மாவட் டப் பொருளாளர் கி.மேகவர்ணன் நன்றி கூறினார்.
தருமபுரி
தருமபுரி ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு ஓய்வூதியர் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.பழனிசாமி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் எம்.பெருமாள், பொருளாளர் கே. கேசவன், நிர்வாகிகள் பி.மோகன் ராஜ், எம்.கோபால், ஏ.சேகர், இ. கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கோரிக் கைகளை விளக்கிப் பேசினர். இதில் அரசு ஊழியர் சங்க மாவட்டச் செய லாளர் ஏ.தெய்வானை, பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சங்க மாவட்டத் தலைவர் டி.பாஸ்கரன், மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் மாவட்டத் தலைவர் ஆர்.சுந்தரமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கோவை
கோவை மாவட்டம், சிவானந்தா காலனியில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு, ஓய்வூதியர் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.மதன் தலைமை வகித் தார். மாவட்டச் செயலாளர் கே. அருணகிரி, இணைச்செயலாளர் எஸ்.பாலகிருஷ்ணன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி உரை யாற்றினார். மத்திய, மாநில பொதுத் துறை ஓய்வூதியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு மாவட்டத் தலைவர் சி.வி.மீனாட்சி சுந்தரம், போக்குவரத்து கழக ஓய்வூதியர் நல அமைப்பின் பி.சுரேந்திரன், ஓய்வு பெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர் நலச்சங்கத்தின் எஸ்.என்.மாணிக் கம், அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் பி.செந்தில்குமார் ஆகி யோர் வாழ்த்திப் பேசினர். ஓய்வூதி யர் சங்க மாநில துணைத்தலைவர் என்.அரங்கநாதன் நிறைவுரையாற்றி னார். முடிவில், மாவட்டப் பொருளா ளர் பி.நடராஜன் நன்றி கூறினார்.
ஈரோடு
ஈரோடு வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு, ஓய்வூதியர் சங்க மாவட் டத் தலைவர் எஸ்.சங்கரன் தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாகிகள் பி. எஸ்.பிரசன்னா, ஹரிதாஸ், கதிர் வேல், சுப்பிரமணியன், தங்கராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசு ஊழியர் சங்க மாநில துணை பொதுச்செயலாளர் மு.சீனிவாசன் துவக்கவுரையாற்றினார். மாவட்டச் செயலாளர் வ.பன்னீர்செல்வம் கோரிக்கைகளை விளக்கிப் பேசி னார். ஓய்வுபெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர் நலச்சங்க மாவட்டத் தலை வர் எஸ்.ஜெய்சங்கர், மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் மாவட்டத் தலைவர் கே.குப்புசாமி, மத்திய, மாநில அரசு ஓய்வூதியர் ஒருங்கிணைப்புக்குழுவின் மாவட் டத் தலைவர் நா.மணிபாரதி ஆகி யோர் வாழ்த்திப் பேசினர். அரசு ஊழி யர் சங்க மேனாள் மாநிலத் தலைவர் கே.ராஜ்குமார் நிறைவுரையாற்றி னார். முடிவில், மாவட்டப் பொருளா ளர் எஸ்.பலசுப்ரமணியன் நன்றி கூறி னார்.