“எரிகிற வீட்டில் பிடிங்கியது ஆதா யம்!” என்ற சொலவடை ஒன்று உள்ளது. அதைத் தான் நினைவுபடுத்துகிறார் பாஜக தமிழ் மாநிலத் தலைவர் அண்ணாமலை.
அதாவது உள்நாட்டு வன்முறையில், பற்றி எரிந்து கொண்டிருக்கும் வங்கதே சத்தில் இருந்து ஜவுளி ஏற்றுமதி தொழில் வாய்ப்பை திருப்பூருக்கு கொண்டு வர தமிழக அரசு முயற்சி செய்ய வேண்டு மாம்!
தினமும் எதையாவது சொல்லி திமுக, கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட இந்தியா அணி கட்சிகளை விமர்சனம் என்ற பெய ரால் விஷத்தை கக்கி எதிர்மறை தோற் றத்தை உருவாக்குவது தான் தனது கடமை என செய்து வருகிறார்.
வங்கதேச பின்னலாடை ஜவுளி ஏற்று மதியை அங்கு ஏற்பட்டிருக்கும் அரசியல் ஸ்திரமற்ற நிலையை பயன்படுத்தி திருப்பூருக்கு கொண்டு வர வேண்டும் என்று கூறுகிறார்.
இதில் இரண்டு விஷயங்கள் உள்ளன. “நம் பக்கத்து வீட்டுக்காரன் எக்கேடு கெடட் டாலும் பரவாயில்லை, நான் எப்படியாவது பிழைத்துக் கொள்ள வேண்டும்” என்ற குறுகிய, சுயநல அரசியல் நோக்கம் ஒன்று. இது வலதுசாரிகளின் இயல்பான குணப்போக்கு. அண்டை நாடுகளுடன் சுமூக உறவு என்பது நமது உள்நாட்டுக் கும் பாதுகாப்பு. ஆனால் மோடி அரசு நம்மைச் சுற்றி இருக்கும் அண்டை நாடு களுடன் நல்லுறவைப் பேணவில்லை என்று பல வெளியுறவுத்துறை அரசியல் நிபுணர்கள் விமர்சித்துள்ளனர். ஏற்க னவே ஒட்டுமொத்த தமிழகத்தை புறக் கணிப்பதைப் போல, திருப்பூர் பின்ன லாடை ஜவுளித் தொழிலுக்கு ஒன்றிய அரசு எந்தச் சலுகையும் காட்டாமல் புறக்கணிப்பதை திசை திருப்ப வேண்டும் என்பது மற்றொன்று.
ஏற்கனவே 2008 ஆம் ஆண்டில் இருந்து திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி தொழில் நெருக்கடியை சந்தித்து வரு கிறது. அதிலும் குறிப்பாக 2014 ஆம் ஆண்டு மோடி தலைமையில் பாஜக அரசு பொறுப்பேற்றதிலிருந்து பண மதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி வரி விதிப்பு, கொ ரோனா பொது முடக்கம், பருத்தி நூல் மற்றும் உதிரி பாகங்கள் விலை உயர்வு, வங்கதேசத்திலிருந்து வரைமுறை இல்லாமல் துணிகளும், பின்னலாடை யும் இந்தியாவுக்குள் இறக்குமதி செய்யப்படுவதால் உள்நாட்டு தொழி லுக்கு ஏற்பட்ட கடும் பாதிப்பு என்று மோடி அரசின் பொறுப்பற்ற செயல்பாடுகளால் திருப்பூருக்கு ஏற்பட்ட பாதிப்புகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.
குறிப்பாக ஏற்றுமதி வர்த்தகம் என்பது நேரடியாக ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் வருவதாகும். எனவே திருப்பூரின் நிலைமைக்கு ஒன்றிய அரசின் கொள்கைகள் தான், முழுக்க முழுக்க காரணம்!
இந்தியாவை ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாட்டுத் தலை வர் என்ற முறையில் மேற்கண்ட விஷ யத்தில், திருப்பூருக்கு நிவாரணம் கிடைக்க வேண்டும் என்று ஏதாவது ஒரு துரும்பையாவது அசைத்திருப்பாரா, அண்ணாமலை? பெரியவர் மோடிஜி இடம் இதைப் பற்றி மூச்சு விட்டிருப்பாரா, இவர்? இதுவரை இவரும் நன்மை செய்யவில்லை. இவரது கட்சியும் நன்மை செய்யவில்லை! இப்போது ஏதோ திருப் பூருக்கு நன்மை செய்ய வந்த அவதாரம் போல,உபதேசம் செய்கிறார்.
எந்த ஒரு ஏற்றுமதி வர்த்தகமாக இருந்தாலும், உலகச் சந்தையில் குறைந்த விலையில் எங்கு பொருள் கிடைக்கிறதோ அதை நோக்கிப் போவதே இயல்பு. ஆக, வங்கதேசத்தில் தற்போது ஏற்பட்டிருக்கும் நெருக்கடி நிலை கார ணமாக, பின்னலாடை வர்த்தகம் வெளி யேறிச் சென்றாலும் கூட, அரசியல் நெருக் கடி ஏதோ ஒரு வகையில் தீர்வு காணப் படும்போது, அங்கே குறைந்த கூலிக்கு உற்பத்தி செய்யப்படும், குறைந்த விலை பின்னலாடைகளை நோக்கியே சர்வ தேசச் சந்தையின் கவனம் செல்லும்.
வியட்நாம், கம்போடியா போன்ற நாடுகளின் அரசுகள், பின்னலாடைத் தொழில் துறைக்கு தேவையான அடிப் படை கட்டமைப்பு வசதிகளை செய்து கொடுத்து, விலை குறைந்த ஆடை களை தயாரித்து சர்வதேசச் சந்தையில் போட்டியிட வாய்ப்பு ஏற்படுத்தி தரு கின்றன.
அதேபோல் இந்திய அரசும் இங்குள்ள தொழில் துறையினருக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்தால், சர்வதே சச் சந்தையில் போட்டியிட முடியும். ஆனால் ரிலையன்ஸ், ஆதித்ய பிர்லா போன்ற பெரு நிறுவனங்களின் நலனில் மட்டுமே அக்கறைப்படும் மோடி அரசு, உள்நாட்டு சிறு, குறு, நடுத்தர தொழில்க ளை நலிவடையச் செய்து வருகிறது.
இந்த அடிப்படைக் கொள்கை விஷ யத்தை திசை திருப்பவும், மற்றவர்கள் மேல் பழியைப் போடவுமே அண்ணா மலை அறிக்கை விடுகிறார். திருப்பூர் தொழில் துறையினருக்கு உருப்படியாக எதையும் செய்யவில்லை. இனியும் செய்யப் போவதில்லை. ஏனென்றால் பாஜகவின் அடிப்படைக் குணமே அது தான்! அண்ணாமலை ஒன்றும் விதி விலக்கல்ல!! “எரிகிற வீட்டில் பிடிங்கியது ஆதாயம்!”
வே.தூயவன்