அவிநாசி, ஜூலை 14- மோடி என்கிற கட்டமைக்கப்பட்ட பிம்பம் நாளுக்கு நாள் சரிந்து வருகிறதென நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா தெரிவித் துள்ளார்.
நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்குட் பட்ட திருப்பூர் மாவட்டம், சேவூர் ஒன்றியம், திருமுருகன்பூண்டி நகராட்சி, அவிநாசி பேரூராட்சிக்குட்பட்ட பகுதி வாக்காளர் களுக்கு ஆ.ராசா எம்.பி., ஞாயிறன்று நன்றி தெரிவித்து, வளர்ச்சி பணிகளை துவக்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக விற்கு கிடைத்த வெற்றி என்பது, முதல்வரின் உழைப்பிற்கும், அர்ப்பணிப்பிற்கும், ஆளு மைக்கும், நிர்வாகத்திற்கும் கிடைத்திருக் கின்ற மிகப்பெரிய ஒப்புதல்.
அதேநேரத்தில், வடமாநிலங்களில் பிற கட்சிகள் பெறுகின்ற, பெற்று கொண்டிருக் கின்ற வெற்றி என்பது மோடி என்கின்ற கட்டமைக்கப்பட்ட பிம்பம் நாளுக்கு நாள் தகர்த்து கொண்டிருப்பதை காட்டுகிறது. விரைவில் இந்தியாவிற்கே ஒரு விடியல் ஆட்சி வரும் என்பதை காட்டுகிறது, என்றார். இந்நிகழ்வில், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் சரவணன் நம்பி, ஒன்றியச் செயலாளர் பால்ராஜ், திருமுருகன்பூண்டி நகர்மன்றத் தலைவர் குமார், நகர்மன்ற உறு ப்பினர் பாரதி, நகரச் செயலாளர் மூர்த்தி, ஊராட்சி மன்றத் தலைவர்கள் விஜயகுமார், கவிதா வெங்கடாசலம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.