districts

img

கல்வித்தர வரிசையில் தமிழ்நாடு இரண்டாம் இடம் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் பெருமிதம்

திருப்பூர், டிச. 6 - இந்தியாவில் கல்வித் தர  வரிசையில் தமிழ்நாடு இரண் டாம் இடத்தை எட்டியுள்ளது என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ்  வி.கே.அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கூறினார்.

திருப்பூர் வெங்கமேடு  வி.கே.அரசு மேல்நிலைப் பள்ளியில் நபார்டு திட்டத் தின் கீழ் ரூ.2 கோடியே 13  லட்சத்து 60 ஆயிரம் மதிப்பில் 10 புதிய வகுப் பறை கட்டிடம், நமக்கு நாமே திட்டத்தின் கீழ்  ரூ.26 லட்சம் மதிப்பில் விளையாட்டு மைதா னம் கட்டமைப்பு அடிக்கல் நாட்டு விழா, முன் னாள் சட்டமன்ற உறுப்பினர் சு.துரைசாமி பெயரில் ரூ.10 லட்சம் மதிப்பில் கலையரங் கம் கட்ட அடிக்கல் நாட்டு விழா உள்பட  ஐம்பெரும் விழா வியாழனன்று நடைபெற் றது. இவ்விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் தா. கிறிஸ்துராஜ் தலைமை வகித்தார். தமிழ்  வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு. பெ.சாமிநாதன், மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகி யோர் முன்னிலை வகித்தனர்.

இதில், கலந்து கொண்ட பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி பேசுகையில், அய்யங்காளிபாளை யம் வி.கே.அரசு மேல்நிலைப் பள்ளிக்கு  12 வகுப்பறைகள், பள்ளி குழந்தைகளுக்கு ஸ்மார்ட் கிளாஸ், ஹைடெக் கிளாஸ், ஸ்டெம்  லேப் உட்பட 67 திட்டங்களை திமுக அரசு கொண்டு வந்துள்ளது. ஒவ்வொரு மாணவ, மாணவிகளுக்கும் தனித்திறமை உண்டு. அதை கண்டுபிடித்து, வளர்த்தெடுக்க வேண்டிய பொறுப்பு பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு உண்டு. பெற்றோர்கள் மற்ற குழந்தைகளுடன், தங்களுடைய குழந்தைகளை ஒப்பிட்டு குழந்தைகளுக்கு மனரீதியாக அழுத்தத்தை உருவாக்க வேண்டாம். அதேபோல் பெற்றோர்களின் கஷ்டத்தை உணர்ந்து படிப்பில் மாணவ, மாணவிகள் கவனம் செலுத்துங்கள். தனிப் பட்ட விறுப்பு, வெறுப்பின்றி ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். ஆகவே அவர்களை  நீங்கள் எந்த உயர்ந்த நிலைக்கு சென்றாலும், பள்ளியையும், ஆசிரியர்களையும் என் றைக்கும் மறக்கக்கூடாது. படிப்பில் கவனம்  செலுத்துங்கள், அதற்கு தடையாக எது இருந் தாலும் முதல்வர் பார்த்துக் கொள்வார். தமிழ் நாடு இந்தியாவில் கல்வித் தர வரிசையில் 2 ஆம் இடத்தை எட்டி உள்ளது. அதேபோல் பொதுத் தேர்வுகளில் திருப்பூர் மாவட்டம் சிறப்பிடம் பெற்று வருகிறது. அதை இம்மு றையும் சாதித்து காட்டுவீர்கள் என்று நம்பு கிறேன் என கூறினார். 

இதில், திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப் பினர் க.செல்வராஜ், மேயர் ந.தினேஷ்கு மார், துணை மேயர் பாலசுப்ரமணியம் உட்பட  பலர் கலந்து கொண்டனர்.