districts

img

குறைந்தபட்சம் மாதம் ரூ.26 ஆயிரம் ஊதியம் பஞ்சாலை, விசைத்தறி சிஐடியு ஆர்ப்பாட்டம்

அவிநாசி, ஜூன் 15– பஞ்சாலை, விசைத்தறி உள்ளிட்ட ஜவு ளித் தொழில்களில் 8 மணி நேர வேலைக்கு  ரூ.26 ஆயிரம் குறைந்தபட்ச மாத ஊதியம் வழங்க வலியுறுத்தி அகில இந்திய பஞ் சாலை மற்றும் விசைத்தறி தொழிலாளர் கள் சங்கத்தின் சார்பில் அவிநாசி, திருப்பூர்  ஒன்றியங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. இந்தியா முழுவதும் பஞ்சாலை, விசைத்தறி உள்ளிட்ட ஜவுளித் தொழில்க ளில் வேலை செய்யும் தொழிலாளர்களை அணி திரட்டும் நோக்கத்தில் அண்மையில் கோவையில் அகில இந்திய பஞ்சாலை மற் றும் விசைத்தறி தொழிலாளர் சங்க மாநாடு  நடைபெற்றது. இதில் பல்வேறு மாநிலங்க ளின் விசைத்தறி, பஞ்சாலை தொழிற்சங்கங் களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இம் மாநாட்டு முடிவுப்படி இப்போராட்டம் நடத் தப்பட்டது. வரலாறு காணாத நூல் விலையை குறைத்து ஜவுளித் தொழிலை பாதுகாக்க  வேண்டும், அனைத்து ஜவுளித் தொழிலா ளர்களுக்கு 8 மணி நேர வேலைக்கு குறைந்த பட்ச மாத ஊதியம் ரூபாய் 26 ஆயிரம் வழங்க  வேண்டும், பஞ்சப்படி, ஓவர்டைம் வேலைக்கு இரட்டிப்பு ஊதியம் வழங்க  வேண்டும், ஜவுளித் தொழிலில் பணிபுரி யும் குடும்பங்களுக்கு கல்வி, சுகாதாரம் வீட்டு வசதிகள் ஏற்படுத்தித் தர வேண்டும்,  இஎஸ்ஐ, பிஎப் அடையாள அட்டை, கிராஜு விட்டி வழங்க வேண்டும், என்.டி.சி.  பஞ்சாலைகளை திறந்து தொழிலாளர்க ளுக்கு வேலை வழங்க வேண்டும், அனைத்து ஜவுளித் தொழில் ஓய்வூதியர்க ளுக்கு மாதம் ரூ. 9 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும், விசைத்தறி தொழிலா ளர்களுக்கு மீண்டும் இன்சூரன்ஸ் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் உள் ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அவி நாசி ஒன்றியம் வஞ்சிபாளையம், வேலாயு தம்பாளையம் கொடிக்கம்பம் அருகில், திருப்பூர் ஒன்றியம் மங்கலம் பள்ளி அரு கில், இடுவாய் பெருமாள் கோயில் அருகில்  புதன்கிழமை இந்த ஆர்ப்பாட்டங்கள் நடத் தப்பட்டன.  இந்த ஆர்ப்பாட்டங்களில் சிஐடியு  தமிழ்நாடு விசைத்தறி தொழிலாளர் சம்மேளனத்தின் மாநில தலைவர் பி.முத்து சாமி, பஞ்சாலைத் தொழிலாளர் சங்கத்தின்  மாவட்டச் செயலாளர் சி.ஈஸ்வரமூர்த்தி, மாவட்டப் பொருளாளர் கே.பழனிச்சாமி, விசைத்தறி தொழிலாளர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் கே.வேலுசாமி, மாவட்ட  பொருளாளர் கே.முருகன், மாவட்ட  துணைத் தலைவர்கள் கே.பாலகிருஷ் ணன், வி.மோகனசுந்தரம், மாவட்ட துணைச் செயலாளர்கள் ஆர்.பழனிச்சாமி, கே.குமர வேல், கே.பழனிச்சாமி, இடுவாய் ஊராட்சி மன்றத் தலைவர் கே.கணேசன் ஆகியோர் உரையாற்றினர். அனைத்து  பகுதிகளிலும் தொழிலாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.