districts

பொங்கல் பண்டிகைக்கு முன்னதாகவே நான்காவது குடிநீர் திட்டம் பயன்பாட்டுக்கு வரும் மேயர் ந.தினேஷ்குமார் தகவல்

திருப்பூர், டிச. 31- திருப்பூர் மாநகராட்சி பகுதி மக்க ளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய் யும் வகையில், நான்காவது குடிநீர்  திட்ட பணி சோதனை ஓட்டம் வெற்றிக ரமாக நடைபெற்று வருவதாக, திருப் பூர் மாமன்ற கூட்டத்தில் மாநகராட்சி  மேயர் ந. தினேஷ்குமார் தெரிவித் தார்.  திருப்பூர் மாநகராட்சி அலுவல கத்தில் மாமன்ற கூட்டம் மாநகராட்சி  மேயர் தினேஷ்குமார் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் மாநகராட்சி ஆணையாளர், துணை மேயர், மண்டல உதவி ஆணையாளர்கள், மாமன்ற உறுப் பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் பேசிய மாநக ராட்சி மேயர் தினேஷ்குமார், திருப் பூர் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் நடை பெற்று வரும் நான்காவது குடிநீர் திட்ட பணிகள் சோதனை ஓட் டம் வெற்றிகரமாக நடைபெற்று வரு கிறது. தற்போது அன்னூரில் உள்ள  சுத்திகரிப்பு நிலையத்திற்கு தண்ணீர்  வந்துள்ளது. பொங்கல் திருநா ளுக்கு முன்னதாகவே நான்காவது குடிநீர் திட்டம் மூலமாக திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட் பட்ட மக்களுக்கு குடிநீர் கிடைத் திடும் வகையில் நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டு உள்ளது. படிப்படி யாக திருப்பூர் மாநகராட்சி முழுவ தும் குடிநீர் கிடைக்கும் வகையில் நட வடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.  மேலும், மாநகரில் தற்போது நடந்து வருகிற பிரதான சாலைக ளின் பணி வருகிற மார்ச் மாதம் நிறை வடையும். மற்ற பகுதிகளில் நடந்து  வருகிற சாலைப்பணிகளை செப்டம் பர் மாதத்திற்குள் முடிக்க நடவ டிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என வும் தெரிவித்தார்.  

இதனை தொடர்ந்து மாமன்ற உறுப்பினர்கள் தங்களது வார்டு பகு திகளில் நிலவும் பிரச்சனைகள் குறித்து மாநகராட்சி கவனத்திற்கு கொண்டு சென்றனர். தொடர்ந்து அனைத்து பகுதிகளும் பாகுபாடு  இல்லாமல் அடிப்படை பிரச்சினை கள் மேம்படுத்தி தரப்படும். தெரு நாய்கள் பிரச்சனைக்காக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகி றது. நடப்பு மாதத்தில் 312 நாய்க ளுக்கு கருத்தடை செய்யப்பட்டுள் ளது. இதுபோல் பழுதடைந்த மின் கம் பங்கள் பல மாற்றி கொடுக்கப்பட்டுள் ளது. போக்குவரத்து நெரிசலை குறைக்க பல்வேறு பாலம் அமைக் கும் பணி மற்றும் ரெயில்வே துறைக்கு சொந்தமான பாலங்களில் பல்வேறு பணிகள் மேற்கொள்ள கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. 100 சதவீதம் பொதுமக்களுக்கும், வணிக நிறுவனங்களுக்கும் குடிநீர் இணைப்பு கொடுக்கப்படும். வரு கிற மாதம் முதல் மண்டலம் வாரியாக  கூட்டம் நடத்தப்படும் என மேயர் தெரி வித்தார். திருப்பூர் மாநகராட்சி கமிஷன ராக கிராந்திகுமார் பாடி பணியாற்றி வருகிறார். தற்போது தமிழகத்தில் 4  ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், நகர்ப்புற வளர்ச்சி ஆணையத்தின் உறுப்பினர்  செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள் ளனர். அதன்படி திருப்பூர் மாநக ராட்சி கமிஷனர் கிராந்திகுமார் பாடி யும், திருப்பூர் நகர்ப்புற வளர்ச்சி ஆணையத்தின் உறுப்பினர் செய லாளராக கூடுதல் பொறுப்பு வகிக்க  நியமிக்கப்பட்டுள்ளார். இதற்காக மாநகராட்சி கமிஷ னருக்கு, மேயர் தினேஷ்குமார் வாழ்த்து தெரிவித்தார். மேலும், மண் டல தலைவர்கள் மற்றும் கவுன்சி லர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.