திருப்பூர், டிச. 31- திருப்பூர் மண்டல அரசுப் போக்குவரத்து பணிமனைகளில் உரிய பராமரிப்பு, தூய் மைப் பணி செய்யாததால் பணிமனை மிக வும் சுகாதார சீர்கேடாக காணப்படும் நிலை யில், ஆய்வு மேற்கொள்ள வந்த சுகாதா ரத் துறை அலுவலர்கள் எந்த நடவடிக்கை யும் எடுக்காமல் சென்றது தொழிலாளர்க ளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி யுள்ளது. காங்கேயம் கிராஸ் சாலையில் அரசுப் போக்குவரத்து கழகத்தின் இரு பணிமனை கள் உள்ளன. இங்கு பேருந்துகள் பழுது பார்க்கும் இடம், நிறுத்துமிடம், தொழிலா ளர் ஓய்வறை என பல்வேறு பகுதிகளும் உரிய பராமரிப்பு இல்லாமல் மோசமான நிலையில் உள்ளது. பணிமனைக்குள் ஒரு பகுதியில் கழிவுநீரானது சேறும், சகதியுமாக உள்ளது.
மேலும், கழிவறை செப்டிங் தொட் டியுடன் இணைக்கப்பட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேறி கடும் சுகாதார சீர்கேடான நிலையில் உள் ளது. சாக்கடை தேங்கியும், பாசம் பிடித்தும் இருக்கும் நிலையில் நோய்த் தொற்றுகள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தொழி லாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். ஆனால், சில தினங்களுக்கு முன்பு மாநக ராட்சி சுகாதாரத் துறையைச் சேர்ந்த ஆய்வாளர்கள் சில பணியாளர்களுடன் இந்த பணிமனைக்கு வந்தனர்.
அவர்கள் உள்ளே வந்து பெயரளவில் சில பகுதிகளை மட்டும் பார்த்துவிட்டுச் சென்றனர். மிக மோசமான சுகாதார சீர்கேடு இருக்கும் இடங்களை வந்து பார்க்கவில்லை. சிறிது நேரத்திலேயே ஆய்வு செய்து முடித்து விட்டதாக அந்த அலுவலர்கள் அங்கிருந்த சிலரிடம் கையெழுத்துப் பெற்றுக் கொண்டு புறப்பட்டுச் சென்றனர். இதனால் அதிருப்தியடைந்த தொழிலா ளர்கள் எதற்காக ஆய்வு செய்கிறார்கள், எதற்காக இங்கு வர வேண்டும். இவ்வளவு மோசமான நிலையிலும் குறைந்தபட்ச தூய்மைப்படுத்தக்கூட நடவடிக்கை எடுக் காமல் வெளியேறி சென்றது கண்டிக்கத் தக்கது. இதனால் இங்கு வேலை செய்யும் தொழிலாளர்கள்தான் கடுமையாக பாதிக் கப்படுவர். எனவே கண்துடைப்பு நடவ டிக்கை மேற்கொள்ளாமல் தூய்மைப் பணி செய்வதுடன் முறையாக கண்காணிக்க வேண்டும் என தொழிலாளர்கள் வலியு றுத்தினர்.