திருப்பூர் மாவட்டம் உடுமலை நகர் பகுதி சிஐடியு சங்கத்தின் முன்னணி ஊழியரும், ஆட்டோ தொழிற்சங்கத்தின் நிர்வாகியுமான சையது இப்ராஹிமிடம்
சனிக்கிழமை இரவு பிர்லா என்பவர் தன்னை ஆட்டோவில் ஏற்றிச் செல்லுமாறு ஆட்டோ ஓட்டுனரை நிர்பந்தப்படுத்தி உள்ளார் ஆட்டோ ஓட்டுனர் மறுக்கவே வலுக்கட்டாயமாக ஆட்டோவில் ஏறி உட்கார்ந்து கொண்டு கீழே இறங்க மறுத்துள்ளார்.
ஆட்டோ ஓட்டுனர் கீழே இறக்கி விட முயற்சி செய்தபோது தனது கையில் வைத்திருந்த கத்தியை கொண்டு ஆட்டோ தொழிலாளியின் பின் முதுகிலும் மண்டையிலும் குத்தி காயப்படுத்தியுள்ளார்.
வலி தாங்க முடியாமல் ஆட்டோ ஓட்டுனர் சப்தம்மிட்டவே, மேலும் தன் கையில் வைத்திருந்த கத்தி மூலம் ஆட்டோ கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தியுள்ளார்.
இதனையடுத்து, தாக்குதல் நடத்திய சமூக விரோதி மீது உடனடியாக காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என உடுமலை காவல்துறையை சிஐடியூ ஆட்டோ தொழிற்சங்கத்தின் சார்பில் கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும், தற்பொழுது உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெற்று வருவதால் இது போன்று சமூக விரோத நடவடிக்கையில் ஈடுபடும் நபர்களை முன்னெச்சரிக்கையாக காவல்துறை கைது செய்ய வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.