districts

img

உபகரணங்களுக்கு ஜிஎஸ்டி: மாற்றுத்திறனாளிகள் ஆவேசம்

திருப்பூர், ஜூன் 16- மாற்றுத்திறனாளிகள் உபகரணங்களுக்கு ஜிஎஸ்டி  வரி விதிப்பை கண்டித்து திருப்பூர் குமரன் சிலை முன்பு புத னன்று தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற் றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டக்குழு உறுப்பினர் கமலக்கண்ணன் தலைமை வகித்தார். வேலம் பாளையம் நகர துணை தலைவர் குப்புசாமி, வடக்கு நகர நிர்வாகி ராஜ்குமார், மாவட்ட தலைவர் த.ஜெயபால் ஆகி யோர் கண்டன உரையாற்றினர். மாவட்ட துணைச்செயலா ளர் ஜார்ஜ் வர்கீஸ், வடக்கு ஒன்றிய தலைவர் பாண்டியன் உட் பட ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.