districts

img

பாலியல் வன்புணர்வு: மாற்றுத்திறனாளிகள் ஆவேசம்

விழுப்புரம், ஆக. 19- விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே மாற்றுத்திறனாளி இளம்பெண்ணை பாலியல் வன்புணர்ச்சி செய்த குற்றவாளி பிரபுவை கைது செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம், இந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஒன்றியம்  விநாயகபுரம் தலித் சமூகத்தை சேர்ந்த  21 வயதுடைய மாற்றுத் திறனாளி பெண்ணை கடந்த  மாதம் 27ஆம் தேதி நள்ளி ரவு அதே கிராமத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் பிரபு என்பவர் வன்புணர்வு செய்துள்ளார். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் காவல்துறையினர் இதுவரை எந்த நடவடிக் கையும் எடுக்கவில்லை.  இதையடுத்து மாற்றுத்திறனாளி கள் சங்கம், மாதர் சங்கம் தலையீட்டின் பேரில் விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பிரபு மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. வழக்கு பதிவு செய்யப்பட்டு 15 நாட்களுக்கு மேலாகியும் இதுவரை பிரபு கைது செய்யப்படவில்லை. மேலும் பிரபு பாதிக்கப் பட்ட பெண்ணின் குடும்பத் தினரை மிரட்டி வருகிறார். இந்நிலையில் பிரபுவை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாதர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் கே.தமிழ்செல்வி, மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் மாவட்டத் தலை வர் பி.முருகன் தலைமை யில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதில் சிபிஎம் மாவட்டச்  செயலாளர் என்.சுப்பிர மணியன், மாவட்ட செயற் குழு உறுப்பினர் ஏ.சங்கரன், மாதர் சங்கத்தின் மாநில துணைச்செயலாளர் எஸ்.கீதா, மாநிலக் குழு  உறுப்பினர் வி.ராதா கிருஷ்ணன், மாவட்டச்  செயலாளர் ஏ.கிருஷ்ண மூர்த்தி, வட்டச் செயலா ளர்கள் கண்டமங்கலம் கே.குப்புசாமி, செஞ்சி ஏ.சகாதேவன், வாலிபர் சங்கத்தின் முன்னாள் மாவட்டச் செயலாளர் எஸ்.சித்ரா, ஏ.அண்ணாதுரை, ஒன்றியச் செயலாளர் சி.கலியபெருமாள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.