திருப்பூர், டிச. 5 - திருப்பூர் வடக்கு வட்டம் பொங்கு பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட காளம்பாளையம் அருகே காலாவதி யான கல்குவாரியில் கொட்டப்பட்ட மாநகராட்சி குப்பைகளை அகற்றி விட்டு அறிக்கை சமர்ப்பிக்க வேண் டும் என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
திருப்பூர் மாநகரப் பகுதிகளில் தினமும் சுமார் 800 டன் திடக்கழிவு கள் உற்பத்தியாகின்றன. இந்த திடக் கழிவுகளை அகற்றும் பிரச்சனை பெரும் தலைவலியாக உருவெ டுத்துள்ளது. அறிவியல் பூர்வமான ஆய்வு, அதற்கேற்ற அணுகு முறையை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொள்ளாமல், அவ்வப்போது பிரச்சனையை சமாளிப்பது என்ற அணுகுமுறையில், மாநகராட்சி சுற்றுவட்டார கிரா மப்புறங்களில் உள்ள காலாவதி யான கல் குவாரிகளில் மாநகராட்சிக் குப்பைகளைக் கொட்டி நிரப்பும் வேலையைத்தான் செய்து வருகி றது.
இதனால் மாநகராட்சிக்கும், சுற் றுவட்டார கிராமப்புற மக்களுக்கும் முரண்பாடு ஏற்பட்டு ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெறுவது கடந்த பல ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது. ஏதோ ஒரு வழியில் சமா ளித்து ஒரு பகுதியில் உள்ள கல் குவா ரிகள் நிரம்பிவிட்டால், வேறொரு கல் குவாரியைத் தேடிக் குப்பை கொட்டு வதைத் தொடங்கி விடுகின்றனர். அதன்படி சமீபத்தில் பொங்குபா ளையம் ஊராட்சிக்கு உட்பட்ட காளம் பாளையம் மற்றும் பள்ளிபாளையத் துக்கு இடையே சுமார் 60 ஏக்கரில் 15க்கும் மேற்பட்ட காலாவதியான கல் குவாரிகள் உள்ளன. இங்கு காலாவதியான கல் குவாரியுள்ள, அரசு புறம்போக்கு புல எண் 206இல், மாநகராட்சி நிர்வாகத்தினர் குப்பை கொட்டத் தொடங்கினர்.
இது அப் பகுதி மக்களிடம் எதிர்ப்பை ஏற்படுத் தியது. பின்னர் மாநகராட்சி அதிகாரி கள், மாநகராட்சி மேயர் நேரடியாக அப்பகுதிக்குச் சென்று பேச்சு வார்த்தை நடத்தினர். வடக்கு வட் டாட்சியர் அலுவலகத்திலும் அமை திப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில் உடன்பாடு ஏற்படாத போதும், மாநகராட்சி நிர்வாகம் மாவட்ட ஆட்சி யரின் உத்தரவைப் பெற்று மேற்படி அரசு புறம்போக்கு நிலத்தில் உள்ள காலாவதியான கல் குவாரியில் குப்பை கொட்டும் பணியைத் தொடங்கியது.
இதற்கெதிராக உள்ளூர் மக்கள் போராட்டம் நடத்தினர். அத்துடன் விவசாயிகள் பாதுகாப்புச் சங்க சட்ட விழிப்புணர்வு அணி செயலாளர் சதீஷ்குமார் இதை எதிர்த்து சென் னையில் உள்ள தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர் வில் பொது நல வழக்குத் தாக்கல் செய்தார். கழிவு குப்பைகளைத் தரம் பிரித்து வகைப்படுத்தாமல் திடக்க ழிவு மேலாண்மை விதி 2016-க்கு எதி ராக திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் தொடர்ந்து செயல்பட்டு வருவதாக அவர் புகார் கூறியிருக்கிறார். இவ்வழக்கு கடந்த டிசம்பர் 2ஆம் தேதி திங்களன்று விசாரணைக்கு வந்தது.
இவ்விசாரணையில் திருப் பூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் தமிழ் நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், மேற்படி காலாவதியான கல்கு வாரியில் குப்பை கொட்டப்படும் இடத்தினை ஆய்வு செய்து, அங்கு குவிக்கப்பட்டுள்ள குப்பைகளை அகற்றுவதற்கான நடவடிக்கை எடுத்து, எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றிய அறிக்கையை பசுமைத் தீர்ப் பாயத்தில் தாக்கல் செய்ய வேண் டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள் ளனர். மேலும் இவ்வழக்கு விசார ணையை ஜனவரி 22ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.