அவிநாசி, டிச. 2- கார்ப்பரேட் தொழிலுக்கு சலுகை வழங்கு கிற மாநில அரசாங்கம், சிறு தொழில்களுக்கு எதுவும் வழங்கவில்லை, கார்ப்பரேட்டுகள் அனைத்தையும் அள்ளிச்செல்ல அனுமதித்துவிட வேண்டாம் என திருப்பூரில் சிபிஎம் மாவட்ட மாநாட்டு பொதுக்கூட்டத்தில் தலைவர்கள் உரையாற்றினர்.
மார்க்சிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்ட மாநாட்டு பேரணியை தொடர்ந்து நடை பெற்ற பொதுக்கூட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் ஜி.சுகுமாரன் பேசுகையில், “வேலையில்லா திண்டாட்டம் என்பது முன்பிருந்த அளவை காட்டிலும் கூடுத லாக உள்ளது என்று பல்வேறு ஆய்வுகள் கூறியுள்ளன, எல்லாவற்றிலும் கார்ப்ப ரேட்மயம் தீவிரமடைந்துள்ளது. ஒன்றிய பாஜக கூட்டணி அரசு, மாநில அரசுகளுக்கு நிர்பந்தத்தை கொடுக்கின்றது.
கேரளா மாநில அரசாங்கம், ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணியை அதானிக்கும், அம்பானிக்கும் கொடுக்க வேண்டாம், எங்கள் தொழிலாளியை வைத்து நாங்கள் பொருத்திக் கொள்கிறோம் என்று கேட்டதற்கு ஒன்றிய அரசு மறுத்துவிட்டது. இந்த மீட்டர் அமலுக்கு வந்தால் 90% அவர்களுக்கு வேலை இழப்பு நேரிடும்.
தமிழக அரசாங்கம் பல்வேறு முதலீடு களை கொண்டு வந்துள்ளது நல்லது தான். ஆனால் சங்கம் வைப்பதற்கு உரிமை மறுத்துள்ளது. கார்ப்பரேட் தொழிலுக்கு சலுகை வழங்குகிற மாநில அரசாங்கம், சிறு தொழில்களுக்கு ஏன் வழங்கவில்லை என்பதுதான் கேள்வி. தமிழகத்தை வேடந்தாங்கல் ஆக்கி விடாதீர்கள் என்று வலியுறுத்த விரும்பு கிறோம். வெளிநாட்டுப் பறவைகள் இங்கு தங்கி முட்டையிட்டு குஞ்சு பொரித்து எல்லா வற்றையும் அழைத்துச் சென்று விடும். அதுபோல் கார்ப்பரேட்டுகள் லாபத்தை அள்ளிக் கொண்டு போய்விடுவார்கள்’ என தெரிவித்தார்.
இந்த பொதுக்கூட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அவிநாசி ஒன்றிய செயலாளர் ஏ. ஈஸ்வரமூர்த்தி தலைமை யேற்று நடத்தினார். ஒன்றிய குழு உறுப்பினர் எஸ்.வெங்கடாசலம் வரவேற்பு உரையாற்றினார். மாநில செயற்குழு உறுப்பினர் டி.ரவீந்திரன், மாநிலக் குழு உறுப்பினர் கே.காமராஜ், மாவட்டச் செய லாளர் செ.முத்துகண்ணன், வரவேற்பு குழு தலைவர் பி.முத்துசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆயிரக்கணக்கா னோர் கலந்து கொண்ட இக் கூட்டத்தின் நிறை வில் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் ஆர்.பழனிச்சாமி நன்றி கூறினார்.