districts

மார்க்சிஸ்ட் கட்சியின் மீது உள் நோக்கத்துடன் அவதூறு:தினமலர் பரப்பிய அவதூறு : திரும்பப் பெற்று மறுப்பு வெளியிடுக!

திருப்பூர், டிச.14-  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மீது உள் நோக்கத்தோடு அவதூறு பரப்பிய  தினமலர் நாளிதழ், அவதூறு செய்தியை திரும்பப்பெற்று பகிரங்கமாக மறுப்பு தெரி விக்க வேண்டும் என்று கட்சியின் திருப்பூர் மாவட்டச்செயலாளர் செ.முத்துக்கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் திருப்பூர் மாவட்டக்குழு சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரி வித்திருப்பதாவது:  தினமலர் நாளிதழ் டீக்கடை பெஞ்ச் என்ற புரணி பேசும் பகுதியில், அவிநாசியில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்ட மாநாட்டிற்கு திருப்பூர் பனியன் கம்பெனிகளில் கட்டாயப்படுத்தி பணம் வசூலித்ததாகவும், அரசு அலுவலகங்களில் அதிகாரிகளை மிரட்டிப் பணம் வசூலித்த தாகவும் ஆதாரம் இல்லாமல், உண்மைக்கு புறம்பான, அவதூறைப் பரப்பி உள்ளனர்.

‘உண்மையின் உரைகல்’ என தனக்குத் தானே பெயர் சூட்டிக் கொண்டிருக்கும் தினமலர் நாளிதழ், பொய்யின் உரை கல்லாக அவதூறு சேற்றை வாரி இறைத்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. பத்திரிகை தருமத்திற்கு எதிரானது ஆகும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்ட மாநாடு டிசம்பர் 1,2 ஆகிய தேதிகளில் அவிநாசியில் வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த மாநாட்டில், திருப்பூர் மாவட்ட மக்கள் பிரச்சனைகள் குறித்து 40-க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

மாநாட்டு பேரணியில் செங்கொடி ஏந்தி  பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட னர். மாநாடு நடைபெற்று முடிந்து இரண்டு வாரங்கள் கழித்து தினமலர் இது போல் செய்தி வெளியிடுவது உள்நோக்கம் கொண்டது. குறிப்பாக மாநாட்டு நிதி வசூல் மாநாட்டிற்கு முன்னதாக நடைபெற்றது. அப்போது குற்றம் கண்டுபிடிக்க முடியாமல் விட்டுவிட்டு, சிறப்பாக நடைபெற்ற மாநாட்டை இழிவுபடுத்துவதற்காக இப்போது செய்தி வெளியிட்டுள்ளது. குறிப்பாக இந்த மாநாட்டு பொதுக் கூட்டத்தில் பேசிய கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் தோழர் உ.வாசுகி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மக்களிடம் உண்டியல் குலுக்கி நிதி வசூலித்து இயங்கக் கூடியது. கம்யூனிஸ்டுகள் உண்டியல் குலுக்கிகள், சூட்கேஸ் குலுக்கிகள் அல்ல! என்று பேசி னார்.

அந்த பேச்சைப் பொறுக்க மாட்டாமல், தினமலர் அவதூறு பரப்பி இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. உழைக்கும் மக்களிடம் நேரடியாக, வெளிப்படையாக உண்டியல் மூலமும், சிறு தொகையாகவும் நிதி வசூலித்து இயக்கம் நடத்த வேண்டும் என்பது மார்க்சிஸ்ட் கட்சி யின் அடிப்படைக் கொள்கையாகும். அத னால் தான் பாஜக அரசு கொண்டு வந்த தேர்தல் பத்திரம் என்ற ஊழல் நடைமுறை யை, அது கொண்டுவரப்பட்ட தொடக்கத்தி லேயே எதிர்த்து, தேர்தலில் எந்தவித ஆதாய மும் பெற மறுத்தது. உச்ச நீதிமன்றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வழக்கு தொடுத்தது.

இந்த வழக்கில், கார்ப்பரேட் நிறுவனங்களிடம் அரசியல் கட்சிகள்,வெளிப் படையாக இல்லாமல், ரகசியமாகபணம் பெறும்தேர்தல் பத்திரம் நடைமுறை செல்லாது, அரசியலமைப்பு, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்திற்கும் இது எதிரானது, சட்டவிரோதமா னது என்று உச்சநீதிமன்றத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை பெற்றது.

பாஜக,ஆர்எஸ்எஸ்க்கு ஊதுகுழலாக தினமலர் 

இதையெல்லாம் நன்கு தெரிந்த தின மலர், பாராட்ட மனமில்லாமல் அவதூறு பரப்புகிறது. பாரதிய ஜனதா கட்சிக்கும்,  ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கும் ஊதுகுழலாக தமிழகத்தில் தினமலர் செயல்படுகிறது. அவர்களுக்கு எதிராக செயல்படக்கூடிய ஜனநாயக இயக்கங்கள், எதிர்க்கட்சி அரசு கள் கொண்டு வரக்கூடிய நல்ல திட்டங்க ளை கேவலப்படுத்தி இழிவுபடுத்துவதை தினமலர் தனது கடமையாக செய்து வரு கிறது என்பது கவலைக்குரியது.

குறிப்பாக பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசின் காலை உணவு திட்டம் அறி வித்த பொழுது, கக்கூஸ் நிரம்பி வழிந்தது என இழிவாக எழுதியது தினமலர். அதன் கீழ்த்தரமான வக்கிர புத்திக்கு இது ஒரு எடுத்துக்காட்டு.

தினமலருக்கு உண்மையில் நேர்மை இருந்தால், அது வெளியிட்ட இந்த அவதூறு க்கு தினமலர் நாளிதழில் பகிரங்கமாக மறுப்பு வெளியிட வேண்டும்.

இல்லாவிட்டால், அது வக்கிரமாக கீழ்த்தரமான பொய் செய்தி வெளியிடும் நாளிதழ் என்பது மேலும் உண்மையாகும்.  

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.