districts

மருத்துவர்களையும் அச்சுறுத்தும் குற்றவியல் சட்டம்: ஒன்றிய அரசு திரும்ப பெற ஐஎம்ஏ கோரிக்கை

அவிநாசி, ஜூலை 15 – மருத்துவர்களையும் அச்சுறுத்தும் புதிய குற்றவியல் சட்டத்தை நிறை வேற்றி இருக்கும் ஒன்றிய அரசு இச்சட் டத்தை உடனடியாக திரும்பப் பெறு மாறு இந்திய மருத்துவர் சங்கம் கோரி யுள்ளது. மேலும் இது குறித்து ஐஎம்ஏ  நிர்வாகிகள் நாடாளுமன்ற உறுப்பினர் களை சந்தித்து முறையிட இருப்பதாக வும் கூறியுள்ளனர்.

திருப்பூர் கணியாம்பூண்டி பகுதி யில் இந்திய மருத்துவ சங்கம் சார்பில்  கலைஅரங்க திறப்பு விழா ஞாயிற்றுக்கி ழமை நடைபெற்றது. இந்த நிகழ்வில் பங்கேற்ற இந்திய மருத்துவ சங்கத் தின் மாநிலத் தலைவர் அபுல் ஹாசன் பத் திரிகையாளரை சந்தித்தார். அப்போது  கூறுகையில், இந்திய மருத்துவ சங்கத் தின் தமிழ்நாடு கிளை சார்பில் கடந்த  6ஆம் தேதி ஆருயிர் என்னும் திட்டத்தை  தமிழக முதல்வர் தொடங்கி வைத்தார்.  இதன் மூலம் 42 ஆயிரம் மருத்துவர்கள் மூலம் பொதுமக்களுக்கு அடிப்படை உயிர்காக்கும் பயிற்சிகளை வழங்க இருக்கிறோம். மேலும் ஒன்றிய அரசு  சமீபத்தில்  பாரதிய நியாய சன்ஹிதா  என்ற சட்டத்தை 2023ஆம் ஆண்டு நிறை வேற்றியுள்ளது. இந்த சட்டத்தில்  106 ஆவது பிரிவின்படி மருத்துவமனை யில் நோயாளி உயிரிழந்தால் மருத்துவ ருக்கு சிறை தண்டனை வழங்கக்கூடிய  வகையில் உள்ளது. இது மருத்துவர்க ளின் மருத்துவ சேவையை பாதிக்கும் வகையில், மருத்துவர்களை அச்சுறுத் தும்படி உள்ளது. இதனை திரும்ப பெற  வேண்டுமென ஒன்றிய அரசை வலியு றுத்தி வருகிறோம், என்றார். 

இதனை தொடர்ந்து பேசிய இந்திய  மருத்துவ சங்கத்தின் தேசிய தலைவர் அசோகன், பாரதிய நியாய சன்ஹிதா 2023 சட்டம் நாடாளுமன்றத்தில் நிலை  குழுவில் விவாதத்திற்கு கொண்டுவ ரப்பட்டபோது இந்திய மருத்துவ சங்கம்  இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இருப்பினும் சட்டம் அமல்படுத்தப்பட் டுள்ளது.  இது மருத்துவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இத னைத் திரும்பப் பெற வலியுறுத்தி ஜூலை மாத கடைசியில் இயக்கம் நடத்த  உள்ளோம். இந்தியாவின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் சந் தித்து இச்சட்டத்தின் பாதிப்புகளை தெரி வித்து திரும்ப பெற வலியுறுத்த உள் ளோம் என்றார்.

கலை அரங்கத் திறப்பு நிகழ்ச்சியில்  திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்து ராஜ் கலந்து கொண்டு பேசினார்.