திருப்பூர், ஜூலை 29 – திருப்பூர் மாவட்டத்தில் மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகளை முன் வைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நகரங்கள், கிராமங்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட பகுதிகளில் மக்கள் சந்திப்பு இயக்கம் நடத்தப்பட்டது.
திருப்பூர் மாவட்டத்தில் மக்களின் வாழ் வாதாரக் கோரிக்கைகளை முன்வைத்து மக்கள் சந்திப்பு இயக்கம் ஜூலை 21 முதல் 28ஆம் தேதி வரை நடத்துவ தென்று மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு முடிவு செய்தது.
குறிப்பாக சொத்து வரி, குப்பை வரி மற்றும் மாநகராட்சி, நகராட்சிகளு டன் அருகாமை கிராம ஊராட்சிகளை இணைப்பதால் ஏற்படும் சாதக, பாதகங் கள், அமராவதி சர்க்கரை ஆலையை நவீ னப்படுத்த தேவையான நிதி ஒதுக்குதல், நல்லாறு, ஆனைமலையாறு நீர்ப்பாச னத் திட்டத்தை நிறைவேற்றுதல், திருப்பூ ரில் புதிதாக கட்டி திறக்கப்பட்டுள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனையை முழுமை யாக செயல்பாட்டுக்கு கொண்டு வரு வது, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனைத்துப் பிரிவு களிலும் சிறப்பு மருத்துவர்கள் நிய மித்தல், வீடில்லா தொழிலாளர்களுக்கு குடியிருப்புகளை உருவாக்குதல், நூறு நாள் வேலைத் திட்டத்தை அனைத்து ஊராட்சிகளிலும் முறையாக அமலாக்கி வேலை கொடுப்பதுடன், நகர்ப்புறங் களுக்கும் இத்திட்டத்தை விரிவுபடுத்துதல், அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்புதல், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத் துதல், முகாம் நடத்தி முறையாக கல்விக் கடன் வழங்குவது, உள்ளாட்சிகளில் தேங்கியுள்ள குப்பைகளை அகற்ற நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத் துதல், தூய்மைப்பணிக்கு கூடுதல் பணி யாளர்களை நியமிப்பது, துப்புரவு பொறி யியல் துறையை உருவாக்குதல், குடிநீர், ரேசன் விநியோகத்தை முறைப்படுத்து வது, சாலைகள், பாலங்களை சீர மைத்து முறையாக பராமரிப்பது, கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட அரசு நகர, புறநகரப் பேருந்துகளை முழுமை யாக அனைத்து வழித்தடங்களிலும் இயக்குவது ஆகிய கோரிக்கைகளை முன் வைத்து இந்த இயக்கம் நடத்தப்பட்டது.
இத்துடன் வருவாய்த்துறை அலுவல கங்களில் சாமானிய மக்கள் சந்திக்கும் லஞ்ச ஊழல் மற்றும் இளைஞர்கள் வாழ்வை பாழ்படுத்தும் போதை பழக் கத்தை தடுத்து நிறுத்த உறுதியான நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த இயக்கத்தில் வலியுறுத்தப்பட்டது.
இதன்படி திருப்பூர் தெற்கு மாநகரம், தெற்கு ஒன்றியம், வடக்கு மாநகரம், வடக்கு ஒன்றியம், வேலம்பாளையம், அவிநாசி, பல்லடம், உடுமலை, ஊத்துக் குளி, மடத்துக்குளம், தாராபுரம் உள் ளிட்ட பகுதிகளில் மார்க்சிஸ்ட் கட்சியி னர் நகரப்பகுதிகள் மற்றும் கிராமப்புறங்க ளில் மக்களை சந்தித்து பிரச்சாரம் செய்த னர். கோரிக்கைகள் அடங்கிய துண்ட றிக்கைகளை வீடு, வீடாக மக்களுக்கு வழங்கினர். உள்ளாட்சி மற்றும் மாவட்ட, மாநில அரசு நிர்வாகங்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகளை விரைந்து நிறை வேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தி னர்.
இந்த இயக்கத்தின் தொடர்ச்சியாக ஆகஸ்ட் 16ஆம் தேதி நூறு நாள் வேலைத் திட்டத்தில் கிராமப்புறங்களில் முழுமை யாக வேலை வழங்குவதுடன், நகர்ப்புற வேலை வாய்ப்புத் திட்டத்தை அமலாக்க வேண்டும் என வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட ஆட்சியரகம் முன்பு பெருந்திரள் முறையீட்டு போராட்டம் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.