இந்திய விடுதலைப் போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரும், ‘தகைசால் தமிழர்’ விருது பெற்ற தோழர் என்.சங்கரய்யாவின் 103 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கொடியேற்றும் விழா ஞாயிறன்று நடைபெற்றது. இதில் கட்சி அணியினர் உட்பட பலர் கலந்து கொண்டு, அங்கு வைக்கப்பட்டிருந்த சங்கரய்யாவின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.