திருப்பூர், டிச.11- 24 மணி நேர செயல்படும் ஊத்துக்குளி தாலுகா மருத்துவமனையில் இரவு நேரங்க ளில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்ப தில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியி னர் மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலரிடம் செவ்வாயன்று புகார் அளித் துள்ளனர்.
ஊத்துக்குளியில் 30 படுக்கை வசதியுடன் கூடிய அரசு தாலுகா மருத்துவமனை செயல் பட்டு வருகிறது. ஆனால் இரவு நேரங்களில் நோயாளிகளை கவனிக்க செவிலியர்கள் இல்லை என கூறி மருத்துவர்கள் நோயாளி களுக்கு சிகிச்சை அளிக்க மறுகின்றனர்.
மேலும், போதுமான தூய்மைப் பணியாளர் கள் இல்லாததால் கழிவறைகளும் சுகாதா ரம் இன்றி காணப்படுகிறது. இதனால் சிகிச்சை பெற வரும் நோயாளிகளுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட் டுள்ளது. கட்டி முடிக்கப்பட்டு செயல்பாட் டுக்கு வராமல் இருந்த இம்மருத்துமனையை பயன்பாட்டிற்கு கொண்டு வரக் கோரி, இந் திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் முற் றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பின்னரே மருத்துவமனை பயன்பாட்டிற்கு வந்தது.
பல போராட்டங்களுக்கு பிறகு செயல்பாட் டுக்கு வந்த மருத்துவமனையில் தற்போது எண்ணற்ற பிரச்சனைகள் உள்ளன. பொது மக்களின் நலனை கருத்தில் கொண்டு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலர் கார்த்திகேயனிடம் செவ்வாயன்று கோரிக்கை மனு அளித்துள்ளதாக மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தெரிவித்த னர்.