அவிநாசி, மே 15- அவிநாசி அருகே வஞ்சிபாளையத்தில் ஞாயிறன்று சிஐ டியு கொடியேற்று விழா நடைபெற்றது. சிஐடியு பஞ்சாலை - விசைத்தறி அகில இந்திய மாநாடு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து செவ்வாயன்று கோவையில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அவி நாசி அருகே வஞ்சிபாளையம் பகுதியில் சிஐடியு கொடி யேற்று விழா நடைபெற்றது. இதில் விசைத்தறி தொழி லாளர் சம்மேளனத்தின் மாநிலத் தலைவர் முத்துசாமி, மாநிலச் செயலாளர் சந்திரன், மாவட்ட தலைவர் வேலு சாமி, மாவட்ட பொருளாளர் பழனிச்சாமி, மாவட்ட நிர்வாகி கள் முருகன், சாமியப்பன், மோகனசுந்தரம், குமரவேல், பாலசுப்பிரமணியம், தேவிகா உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.