districts

img

அனுப்பர்பாளையத்தில் 9 வீதிகளுக்கு பெயர்கள் இல்லாததால் சான்றிதழ்கள் பெறுவதில் சிக்கல்

திருப்பூர், டிச.11- அனுப்பர்பாளையம் பகுதிகளில் உள்ள 9 குறுக்கு வீதிகளுக்கு பெயர்கள் இல்லாததால், சான்றி தழ்கள் பெறுவதில் சிக்கல் உள்ளது.  எனவே இப்பகுதிகளுக்கு உடனடி யாக பெயர் வைத்து, அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து 11 ஆவது வார்டு பொதுமக்கள் 1 ஆவது மண்டலத் தலைவர் உமா மகேஸ்வரி வெங்க டாசலதிடம் அளித்த மனுவில் கூறி யிருப்பதாவது,

திருப்பூர் மாநகராட்சி  அனுப்பர்பாளையம் முதலாம் மண் டல அலுவலகத்திற்கு தெற்கு, காந்தி ரோட்டின் மேற்கு பகுதியில் 9 குறுக்கு  வீதிகள் உள்ளன. இங்கு 100க்கும் மேற்பட்ட வீடுகள், பாத்திரப் பட்டறை கள், மருத்துவமனைகள், பனியன்  கம்பெனிகள் உள்ளன. பேரூராட்சி யாக இருந்து நகராட்சியாக மாற்றப் பட்டு, தற்போது மாநகராட்சியாக மாற்றப்பட்டுள்ளது. இதுவரை இப்ப குதி மக்கள் செலுத்தும் சொத்துவரி,  குடிநீர் கட்டணம், வாக்காளர் அடை யாள அட்டை, ரேசன் அட்டை, ஆதார்  அட்டை, பான் அட்டை என அனைத்து  முகவரியிலும் காந்திரோடு என்றே உள்ளது. இப்பகுதி எதிர்புறம் உள்ள பகுதிக்கு அடையாளப் பெயர்கள் உள்ளன.

இப்பகுதிக்கு காந்தி ரோடு என மட்டும் உள்ளதால், பல நேரங்களில், தாபல் காரர்கள், அரசு அதிகாரிகள், மாநகராட்சி பணியாளர்கள் உள்ளிட்ட அனைவ ருக்கும் குழப்பம் ஏற்படுகிறது. மேலும், பல்வேறு சான்றிதழ்கள் பெறுவதில் சிக்கல் உள்ளது. எனவே  மாநகராட்சி முதலாம் மண்டல அலுவ லகம் முதல் கோவை டிபார்ட்மெண்ட்  ஸ்டோர் வரை உள்ள உள்ள 9 குறுக்கு  விதிகளுக்கும் அனுப்பர்பாளையம் மேற்கு குறுக்கு வீதி 1,2,3,4,5,6,7,8,9 என பெயர் வைத்து, அறிவிப்பு பலகை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இதே கோரிக்கையை மாநக ராட்சி மேயர் ந.தினேஷ்குமாரை சந் தித்து வலியுறுத்தியுள்ளனர். இந்நிகழ்வுகளில், பொதுமக்களு டன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்  கே.ரங்கராஜ், வேலம்பாளையம் நக ரச் செயலாளர் ச.நந்தகோபால், நக ரக்குழு உறுப்பினர் பி.சின்னச்சாமி, அனுப்பர்பாளையம் கிளைச் செய லாளர் ப.சதீஷ், பத்திரத் தொழிலாளர்  சங்கத் தலைவர் அ.ஆறுமுகம்  உட்பட பலர் பங்கேற்றனர்.