திருப்பூர், டிச.6- இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை உரு வாக்கிய டாக்டர் அம்பேத்கர் நினைவு தினத்தை முன் னிட்டு வெள்ளியன்று தீண் டாமை ஒழிப்பு முன்னணி சார் பில் அம்பேத்கர் உருவச் சிலைக்கு மாலை அணி வித்து மரியாதை செலுத்தப் பட்டது.
டிச.6 ஆம் தேதி சட்ட மேதை டாக்டர் அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் சி.கே.கன கராஜ் தலைமையில் திருப்பூர் காமராஜர் சாலையில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப் பட்டது.
இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.ஜெய பால் அம்பேத்கரை நினைவு கூர்ந்து, மதவாத சக்திகளை ஒழித்திட வேண்டிய அவசி யத்தை வலியுறுத்திப் பேசினார். இதில், கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் தௌ.சம்சீர் அகமது, வடக்கு மாநகரச் செய லாளர் பா.செளந்தரராசன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட நிர்வாகிகள் பா. ஞானசேகரன், எஸ்.சண்முகம், ரமேஷ் மாற் றுத் திறனாளிகள் சங்க மாநிலக் குழு உறுப் பினர் சஞ்சீவ், சிஐடியு நிர்வாகி பி.பாலன் உட் பட திரளானோர் கலந்து கொண்டனர்.