districts

img

சாலை தடுப்பில் கார் மோதி விபத்து ஒருவர் பலி, மூன்று பேர் பலத்த காயம்

திருப்பூர், டிச.26- திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே பழங்கரையில் சாலை தடுப்பில் கார் மோதி திங்கள்கிழமை அதிகாலை  விபத்துக்குள்ளானது. இதில் கோவையைச் சேர்ந்த ஒருவர்  பலியானார். மேலும் 3 பேர் அவிநாசி அரசு மருத்து வமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  கோவை சேர்ந்த 4 பேர் பவானி சங்கமேஸ்வரர் கோயி லுக்கு சென்றுள்ளனர். திங்கள்கிழமை அதிகாலை பவானி யில் இருந்து புறப்பட்டு காரில் கோவை நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவிநாசி அருகே பழங்கரை புறவழிச் சாலையில் வரும்போது எதிர்பாராத விதமாக கார்  சாலை தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், பலத்த  காயமடைந்த கோவை ஆவாரம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் மகன் மோகன் (37) என்பவர் இறந்தார்.   மேலும், பலத்த காயமடைந்த 3 பேர் அவிநாசி அரசு மருத்து வமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  இது குறித்து அவிநாசி காவல்துறையினர் வழக்குப் பதிவு  செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.