districts

img

அறிவியல் வழிகாட்டி ஆசிரியர்களுக்கு பயிற்சி

திருப்பத்தூர், அக்.21 - தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்தும் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டுக்கான “ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான சுற்றுச் சூழலைப் புரிந்து கொள்ளுதல்” என்ற கருப்பொருளில் வழிகாட்டி ஆசிரியர்களுக்கான பயிற்சி திருப்பத்தூர் மாவட்ட பழைய ஜிடிபி அரங்கில் மாவட்ட துணைத் தலைவர் சத்தியமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. மாணவர்களை அறிவியல் மனப்பான் மையுடன் சிந்திக்கவும் செயல்படவும் வைக்க ஆசிரியர்களால் மட்டுமே முடியும் என்று ஒருங்கிணைந்த கல்வி மாவட்ட உதவி திட்ட அலுவலர் பிரபாகரன் பேசினார். நாளைய அறிவியல் அறிஞர்களை உரு வாக்குவதற்காக குழந்தைகளை இத்தகைய அறிவியல் மாநாடுகளில் பங்கேற்கச் செய்ய வேண்டும் என்று மாவட்ட கல்வி அலுவலர் (மெட்ரிக்) வேத பிரகாஷ் பேசினார். மாநில பொதுச் செயலாளர் எஸ்.சுப்பிர மணி பேசுகையில், “குழந்தைகளை அறிவியல் மனப்பான்மையுடன் வளர்க்க  ஒன்றிய அரசின் அறிவியல் தொழில் நுட்பத்  துறையுடன் இணைந்து குழந்தைகள் அறிவியல் மாநாடு, துளிர் திறனறித் தேர்வு, ஜந்தர் மந்தர் வினாடி வினா, அறிவியல் திரு விழா, வான் உற்றுநோக்கல் போன்ற தமிழ்நாடு அளவில் இயக்கம் நடத்தி வரு கிறது” என்றார். சேலம் மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவக் கல்லூரி நுண்ணுயிரியல் துறை உதவி பேராசிரியர் திருநாவுக்கரசு, மாவட்ட இணைச் செயலாளரும் குனிச்சி மோட்டூர் பள்ளியின் ஆசிரியருமான மாரிமுத்து, கஜல்நாயக்கன்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் நித்யா ஆகியோர் வழிகாட்டி ஆசிரியர்களுக்கான பயிற்சியில் கருத்தாளராக செயல்பட்டனர்.

பயிற்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட அறிவி யல் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். பாராட்டு விழா நிகழ்வில் சென்ற ஆண்டு நடைபெற்ற துளிர் திறனறித் தேர்வு, குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் பங்கேற்ற குழந்தைகள் மற்றும் வழி காட்டிய ஆசிரியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழும் கேடயமும் வழங்கப்பட்டன. முன்னதாக மாவட்டச் செயலாளர் மாணிக்க முனிராஜ் வரவேற்றுப் பேசினார். நகரச் செயலாளர் பாண்டியன் நன்றி கூறினார். மாவட்ட துணைத் தலைவர்கள் ராமன்,  துரைமணி, செண்பகவல்லி, துணைச் செய லாளர்கள் முருகன், ராமு, செயற்குழு உறுப்பினர்கள் தங்கம், ஆனந்த், எழிலரசன், தமிழரசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.