திருப்பத்தூர், ஜூலை 31 – தமிழ்நாடு அனைத்து ஓய்வூதியர் சங்கத்தின் திருப்பத்தூர் மாவட்ட 4 ஆவது மாவட்ட தலைவர் இராசு தலைமையில் ஞாயி றன்று (ஜூலை, 31) நடைபெற்றது. மாவட்டத் தலைவர் இராசு சங்க கொடியை ஏற்றினார். மாவட்ட இணைச் செய லாளர் ஜவஹர்லால் நேரு அஞ்சலி தீர்மான த்தை வாசித்தார். மாவட்டச்செயலாளர் ஏ. ஞானசேகரன் வேலை அறிக்கையையும், பொருளாளர் எம்.ராமகிருஷ்ணன் வரவு, செலவு அறிக்கை யையும் சமர்ப்பித்தனர். தட்சிண ரயில்வே எம்பிளாயிஸ் யூனியன் பொறுப்பாளர் எம். காசி, மாநில துணைத்தலைவர் ஏ. ரங்கன், சிஐடியு அமைப்பாளர் சி. கேசவன், அஞ்சல் துறை ஓய்வூதிய மாவட்டச் செய லாளர் சி.செஞ்சி மணி ஆகியோர் வாழ்த்திப்பேசினர். மாநில பொதுச்செயலாளர் பி.கிருஷ்ண மூர்த்தி மாநாட்டை நிறைவு செய்து பேசி னார். முன்னதாக மாநில செயற்குழு உறுப்பி னர் எஸ்.கார்மேகம் வரவேற்றார். மாவட்ட இணைச் செயலாளர் எஸ். இளங்கோவன் நன்றி கூறினார்.
தீர்மானங்கள்
70 வயது முடிந்த ஓய்வூதியர்களுக்கு 10 விழுக்காடு ஊதிய முயற்சி வழங்க வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல் படுத்த வேண்டும், ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் முன்பு போல திருப்பத்தூரில் நின்று செல்ல வழிவகை செய்யவேண்டும், உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
நிர்வாகிகள்
மாவட்டத் தலைவராக சா.இராசு, செயலாளராக எ.ஞானசேகரன், பொருளாளராக எஸ்.அனந்தன் ஆகி யோர் தேர்வு செய்யப்பட்டனர்.