districts

img

குறுமன்ஸ் மக்களுக்கு சாதிச்சான்று வழங்க வேண்டும் திருப்பத்தூர் மாவட்ட மாநாடு வலியுறுத்தல்

திருப்பத்தூர், ஜூலை 16 - திருப்பத்தூர் மாவட்டத்தில் விண்ணப்பம் செய்ததும் குறுமன்ஸ் இனமக்களுக்கு சாதிச் சான்று வழங்க வேண்டும் என்று மாவட்ட மாநாடு வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு குருமன்ஸ் பழங்குடி மக்கள் சங்கத்தின் திருப்பத்தூர் மாவட்ட  மூன்றாவது மாநாடு தலை வர் சிவலிங்கம் தலைமையில் நடை பெற்றது. மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில பொதுச் செய லாளர் சரவணன் மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். சங்கத்தின் மாவட்டபொதுச் செயலாளர் பி.வீரபத்திரன் வேலை அறிக்கையையும், பொருளாளர் கோ.அரங்கநாதன் வரவு-செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர். சங்க நிர்வாகிகள் காளியப்பன், கரிபிரான், தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட பலரும் பேசினர்.தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பி. டில்லிபாபு நிறைவுரையாற்றினார். குருமன்ஸ் பழங்குடி இன மக்கள் விண்ணப்பம் செய்ததும் சாதிச் சான்று வழங்க வேண்டும், வன உரிமை பாதுகாப்பு சட்டம் 2006ஐ உறுதி யுடன் அமல்படுத்த வேண்டும். ஏரியில் உள்ள அந்நிய மரங்களை அகற்ற வேண்டும், ஏரியிலும் மலை அடிவாரத்திலும் கால்நடைகளுக்கு மேய்ச்சல் நிலங்களை உருவாக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.