districts

img

தொடர் மழை: ஜலகாம்பாறையில் ஆர்ப்பரிக்கும் தண்ணீர்

திருப்பத்தூர், மே 18- தொடர் மழையால் ஜலகாம்பாறை அருவி யில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. தமிழக-ஆந்திர எல்லைப் பகுதியில் பெய்து வரும் கனமழையால் புல்லூர் தடுப்பணை நிரம்பியது. இதனால் திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள நாட்றாம் பள்ளி, ஏலகிரிமலை, ஜோலார்பேட்டை பகுதி நீர்நிலைகளில் தண்ணீர் வரத்து அதிகரித் துள்ளன. மேலும், ஆம்பூரை  ஒட்டியுள்ள வனப்பகுதியி லும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஏலகிரி மலையின் தெற்கு பகுதி யில் அமைந்தள்ள ஜலகாம் பாறை நீர் வீழ்ச்சியில் தண்ணீர் வரத்து அதிகரித் திருக்கிறது. அங்கு ஆர்ப் பரித்து கொட்டும் நீர் வீழ்ச்சியை கண்டு ரசிக்க சுற்றுலா பயணிகள் அதிகம்  திரண்டுள்ளதால் வனத் துறையினர் தொடர்ந்து  கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.