districts

2 டன் ரேசன் அரிசி பறிமுதல்

வாணியம்பாடி, அக். 12- திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த அர பாண்டகுப்பம் சுடுகாடு அருகே உள்ள தென்ன தோப்பில் கேட்பாரற்ற நிலையில் ரேசன் அரிசி மூட்டைகள் இருப்பதாக வேலூர் குடிமை பொருள் வழங்கல் அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் குற்ற புலனாய்வு துறை உதவி ஆய்வாளர் தென்னரசு தலை மையிலான அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தி னர். அப்போது சுடுகாடு பகுதியில் 2 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைத்தி ருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அதிகாரி கள் ரேசன் அரிசி மூட்டை களை பறிமுதல் செய்தனர்.

;