திருநெல்வேலி, பிப்.3- ரூ.7 கோடி மோசடி வழக்கில் பெண் கைது செய்யப்பட்டார். தனியார் நிதி நிறுவனத்தில் கடந்த 2018-ம் ஆண்டு இயக்குனர்களாக ராம சுதர்சன், சந்திரன், கவிதா மற்றும் மோகன்தாஸ் ஆகியோர் பணிபுரிந்து வந்தனர். இவர்கள் நெல்லை, மதுரை, தர்மபுரி, மயிலாடுதுறை, கடலூர், பொள்ளாச்சி மற்றும் கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் நிதி நிறுவனம் நடத்தி, நிறுவனத்தின் மாதாந்திர மற்றும் வருடாந்திர திட்டங்களில் பணம் செலுத்துவதற்கு கூடுதல் வட்டி தருவதாக ஆசைவார்த்தை கூறி மேற்கண்ட மாவட்டங்களில் உள்ள பொது மக்களிடம் சுமார் ரூ.7 கோடி வரை வசூல்செ ய்தனர். அந்த பணத்தை பெற்று கொண்டு பொது மக்களுக்கு வட்டி கொடுக்காமலும், பணத்தை திருப்பிக் கொடுக்காமலும் இருந்து வந்துள்ளனர். இதுகுறித்து நெல்லை மாவட்ட பொரு ளாதார குற்றப்பிரிவில் 2018 ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டு ராம சுதர்சன், சந்திரன் ஆகிய 2 பேரும் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த பொள்ளாச்சியை சேர்ந்த கவிதா உள்ளிட்டவர்களை பொருளாதார குற்றப்பிரிவு இன்ஸ்பெக் டர் ரோஸ்லின் சாவியோ தலைமையில் தேடி வந்தனர். இந்த நிலையில் கவிதாவை போலீசார் கைது செய்தனர்.