districts

களக்காடு புலிகள் காப்பகத்தில் செல்போன் செயலி மூலம் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி

திருநெல்வேலி ,பிப். 8- நெல்லை மாவட்டம் களக்காடு புலிகள் காப்பகத்தில் உள்ள, புலி, சிறுத்தை, யானை, கரடி, செந்நாய், கட மான், ராஜநாகம், கருமந்தி, சிங்கவால்குரங்கு உள்ளிட்ட வனவிலங்குகள் குறித்து ஆண்டுதோறும் கணக் கெடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  இந்தாண்டுக்கான பருவமழைக்கு பிந்தைய கணக்கெடுப்பு பணிகள் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இதையொட்டி கணக்கெடுப்பு குழுவினருக்கு தலையணையில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. புலிகள் காப்பக துணை இயக்குனர் ரமேஷ்வரன் தலைமையில் சூழலியலாளர் ஸ்ரீதர், உயிரியலாளர் ஆக்னஸ் ஆகியோர் பயிற்சி அளித்தனர். இதில் வனசரகர்கள் களக்காடு பிரபாகரன், கோதையாறு சிவலிங்கம், வனவர் ஜாக்சன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  கொசுவலை, மழை கோர்ட், டார்ச் லைட், செல்போன் மற்றும் உபகரணங்களை துணை இயக்குனர் ரமேஷ்வரன் கணக்கெடுப்பு குழுவின ருக்கு வழங்கினார். அதன்பின் வனத்துறை ஊழியர்கள் 79-க்கும் மேற்பட்டோர் அடங்கிய 21 குழுவினர், களக்காடு, திருக்குறுங்குடி , கோதையாறு வனசரகங்க ளுக்கு சென்று கணக்கெடுப்பு பணியை தொடங்கி னர்.  இவர்கள் வருகிற 13-ஆம் தேதி வரை வனப்பகுதி யில் தங்கியிருந்து செல்போன் செயலி மூலம் கணக் கெடுப்பார்கள். பின்னர் இந்த தகவல்கள் தேசிய புலிகள் ஆணை யத்திற்கு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

;