districts

img

காட்டுப் பன்றிகளை வனவிலங்கு பட்டியலில் இருந்து நீக்க வேண்டும்

திருநெல்வேலி, ஜன.8- நெல்லை மாவட்டம் களக்காடு பகுதி யில் வாழை விவசாயம் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இதற்கு அடுத்ததாக நெல் மற்றும் கிழங்கு வகைகளை விவசாயி கள் அதிகமாக பயிர் செய்கிறார்கள்.  களக் காடு பகுதி, மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்திருப்பதால், இங் குள்ள விவசாயிகள் வனவிலங்குகளின் தொல்லைகளை எதிர்கொள்ள வேண்டி யது உள்ளது. குறிப்பாக, காட்டுப் பன்றி களின் அட்டகாசத்தால் காலம் காலமாக இப்பகுதி விவசாயிகள் பாதிக்கப்பட்டு வரு கிறார்கள். மலையில் இருந்து அடிவாரப்  பகுதிக்கு வரும் காட்டுப் பன்றிகள் இரவு  நேரங்களில், விவசா யிகளின் வாழை மற்றும் கிழங்கு பயிர் செய்துள்ள தோட் டங்களுக்குள் பெரும் கூட்டங்களாகப் புகுந்து, மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்து கின்றன. வாழைப் பயிர்களின் அடிப்பகுதியைக் கடித்துக்குதறி, அதன் கிழங்கை சாப்பிடு கின்றன. சர்க்கரைவள்ளி கிழங்குகளையும் இவ்வாறே சாப்பிடுகின்றன. தென்னங் கன்றுகளையும் இந்தக் காட்டுப் பன்றிகள் விட்டு வைப்பதில்லை. தற்போது இந்தக்  காட்டுப் பன்றிகளின் அட்டகாசம் அதிக ரித்துள்ளதால், நாங்குநேரி சட்டமன்ற அலு வலகத்தில் தொகுதி எம்.எல்.ஏ. ரூபி மனோ கரனை நேரில் சந்தித்த களக்காடு பகுதி விவசாயிகள், கோரிக்கை மனு ஒன்றையும் கொடுத்தனர். அந்த மனுவில், “நாங்கள் வங்கிகளில் கடன் பெற்றுதான் விவசாயம் செய்து வருகிறோம்.

வாங்கிய  கடனை அடைக்க முடியாத நிலையில்தான்  விவசாயத் தொழில் உள்ளது. இந்த  நிலையில், தற்போது காட்டுப் பன்றிகள்  கூட்டம் கூட்டமாக எங்களது வாழைத் தோட்  டங்கள் மற்றும் விளை நிலங்களுக்குள் புகுந்து, பயிர்களை சேதப்படுத்தி வரு கின்றன. இந்தக் காட்டுப் பன்றிகள் தமிழக அரசின் வன விலங்குகள் பட்டியலில் இருப்பதால், அவற்றைத் தாக்குவது தண்ட னைக்குரிய குற்றமாகும் என்பதால், எங்க ளால் அவற்றை ஒன்றும் செய்ய முடிய வில்லை. காட்டுப் பன்றிகளின் அட்டகா சத்தைக் கட்டுப்படுத்தி விவசாயி களை காக்க, கேரள அரசு, இந்தக் காட்டுப் பன்றி யை வனவிலங்குகள் பட்டியலில் இருந்து நீக்கிவிட்டது. அதேபோல், தமிழகத்திலும் காட்டுப் பன்றியை வனவிலங்குகள் பட்டி யலில் இருந்து நீக்கி, அவை விவசாயப் பயிர்களுக்கு சேதம் ஏற்படுத்தி வரு வதை கட்டுப்படுத்தி, எங்களின் வாழ்வா  தாரத்தைக் காக்குமாறு கேட்டுக்கொள்கின்  றோம்.  ஏற்கனவே நாங்கள் வாங்கிய கடனை கட்ட முடியாமல் தவிக்கும் நிலையில், காட்டுப் பன்றிகளின் அட்டகாசம் இனியும் தொடர்ந்தால், எங்களால் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியே இல்லை” என கூறியுள்ளனர். மனுவைப் பெற்றுக்கொண்ட ரூபி மனோகரன் எம்.எல்.ஏ., இதுகுறித்து சட்ட மன்றத்தில் உடனடியாகப் பேசுவதோடு, முதலமைச்சரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

;