திருநெல்வேலி, ஜூலை 31- ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத் தில் நடைபெறுகிற சாதியப் படுகொலை களைக் தடுத்திடக் கோரி நெல்லை வண்ணார் பேட்டையில் சமூக நல்லிணக்க கூட்டியக்கம் சார்பில் சாதி கடந்த சமத்துவத்திற்கான தொடர் முழக்க போராட்டம் ஜூலை 31 புதனன்று நடை பெற்றது. இதில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.
240 படுகொலைகள்
ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத் தில் கடந்த மூன்று ஆண்டுகளில்240 படுகொலை கள் அரங்கேறியுள்ளன. உயிர் பறிப்பு கொலைக் கருவிகளாக பயன்படுத்தப்படும் குரூரம் நடந்தேறி வருகிறது. பள்ளி, கல்லூரி மாணவர் களிடையே ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெறுகிற சாதியப் படு கொலைகளைத் தடுத்திடவும், சாதி மறுப்பு திருமண தம்பதிகள் சாதி ஆணவக் கொலை களுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் ஆளாகு தலுக்கு எதிராகவும் சாதி கடந்த சமத்துவ சங்கமத்திற்கான வேண்டுகோளை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி விடுத்தது. அதன் முன் முயற்சியில் பல்வேறு ஜனநாயக, தலித், முற்போக்கு, சமூக நீதி அமைப்புகள் ஒன்றிணைந்து சமூக நல்லிணக்க கூட்டியக்கம் சார்பில் சமத்துவ சங்கம நிகழ்வு நடந்தது.
உழைப்பாளிகளின் ஒற்றுமையை உறுதிசெய்வோம்!
விடுதலை போர்க் களத்தில், கல்வியில், எழுத்துலகில், சமூக சீர்திருத்த இயக்கத்தில் முன்னோடியாக திகழ்ந்த திருநெல்வேலி - தூத்துக்குடி - தென்காசி மாவட்டங்களை உள்ள டக்கிய ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டத் தின் அமைதியான, இணக்கமான வாழ்வை, சாதி வேறுபாடுகள் கடந்த உழைப்பாளி மக்க ளின் ஒற்றுமையை உறுதி செய்ய இக் கூடல் நடைபெறுகிறது என தலைமை உரையில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பொதுச் செயலாளர் கே.சாமுவேல்ராஜ் குறிப்பிட்டார்.
தமிழ்நாடு அரசு சாதியப் படுகொலை களைத் தடுத்து நிறுத்தவும், சாதிவெறியர் களைத் தனிமைப்படுத்தவும், காவல்துறை யைச் சீர்படுத்தவும்,வழக்குகளை விரைந்து முடித்திடவும், பள்ளி, கல்லூரிகளில் பாகுபாடு களைக் களைய நீதிபதி சந்துரு குழு பரிந்து ரைகளை அமலாக்கவும் உரிய நட வடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்று வலியுறுத்தப்பட்டது. தென் மாவட்டங்களின் தொழில்வளம், புதிய வேலைவாய்ப்புகள், கட்டுபடியான விவசாயம், விலைவாசி கட்டுப்பாடு, பொதுத்துறை பாதுகாப்பு, கார்ப்பரேட் ஆதரவு பொருளாதாரப் பாதையை மாற்றுதல், மாநில உரிமைகள் ஆகிய பொதுப் பிரச்சனைகளுக்கான வாழ்வாதாரக் கோரிக்கைகளுக்கான போராட்டத்தில் சாதி, மத வேறுபாடுகளைக் கடந்து எல்லோரும் ஒன்றிணைய வேண்டு மென்ற வேண்டுகோளை பல்வேறு அமைப்பு களைச் சேர்ந்த தலைவர்களும் முன்வைத்தனர். இந்த போராட்டத்தில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சிறப்புத் தலைவர் முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர் எஸ்.கே.மகேந்தி ரன் நோக்கவுரை ஆற்றினார். தொடர் முழக்கத்தை அய்யா வழி சமயத் தலைவர் பாலபிரஜாபதி அடிகளார் துவக்கி வைத்து உரையாற்றினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர்கள் கே.ஜி.பாஸ்கரன், பி.சுகந்தி, மாவட்டச் செயலாளர் க.ஸ்ரீராம் மற்றும் த.செல்லக்கண்ணு, இ.மோகனா, க சுவாமிநாதன் (தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி), அமிர்த லிங்கம் (விவசாயத் தொழிலாளர் சங்கம்), எஸ்.காசி விஸ்வநாதன் (ஏ.ஐ.டி.யூ சி), ஜி.ரமேஷ் (சிபிஐ - எம்.எல்), இரா. வேல்முரு கன் (திராவிடர் கழகம்), கு. ஜக்கையன் (ஆதித் தமிழர் கட்சி), தமிழரசு (தமிழ்ப்புலிகள் கட்சி), ப.ராஜ்குமார் (தமிழர் விடுதலைக் களம்), மங்கள் ராஜ் பாண்டியன் (தேவேந்திர குல மக்கள் முன்னேற்றப் பேரவை), ஜார்ஜ் ராஜேந்திரன் (தாழ்த்தப்பட்டோர் பழங்குடி யினர் பணிக் குழு), ஆர்.கிருஷ்ணன் (முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்), மக்கள் மருத்துவர் எஸ்.இராமகுரு, லெனின் கென்னடி ( தமிழர் உரிமை மீட்புக் களம்), மு.கதிரவன் (திராவிட தமிழர் கட்சி), தமிழ் மாறன் (மள்ளர் பேராயம்), ஏ.கே.நெல்சன் (புரட்சி பாரதம்), சுந்தரமூர்த்தி (ஏ.டி எம்.எஸ்), சி.பாலமுருகன் (பூர்வீக தமிழர் கட்சி), இலோசியஸ் (தலித் கிறித்தவர் இயக்கம்), கரிசல் சுரேஷ் (விசிக), முருகன் கண்ணா (சமூக செயற்பாட்டாளர்), அருள் செல்வன் (விசிக), சி. முத்துக் குமாரசாமி (அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம்), பி. கற்பகம் (ஜனநாயக மாதர் சங்கம்), ஆர் மோகன் (சி.ஐ.டி.யு), ஆர்.முருகன் (சி.ஐ.டி.யு), தே அருள்ராஜ் (இந்திய மாணவர் சங்கம்) ஆகியோர் உரையாற்றினர்.
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி யின் மாவட்டச்செயலாளர் எம்.சுடலை ராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச்செய லாளர் ஆர். சடையப்பன், சிபிஐ(எம்எல்) மாவட்டச் செயலாளர் எம்.சுந்தர்ராஜன், விடுதலை சிறுத்தை கட்சி மாநகர் மாவட்டச் செயலா ளர் எம்.முத்துவளவன், எம்.சி.சேகர், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டப் பொரு ளாளர் வழக்கறிஞர் கு. பழனி, சுகுமாரன், கருமுகிலன், இளமாறன் கோபால், எஸ்.ராமமூர்த்தி, கணேச பாண்டியன், வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி, ஏ. செந்தில்வேல் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். 1000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
சாதிப் பாகுபாடற்ற தமிழ்நாட்டை உருவாக்க முன் வாரீர்!
பால பிரஜாபதி அடிகளார் அழைப்பு
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் முன்முயற்சியில் நடைபெறுகிற சமூக நல்லிணக்க கூட்டியக்கம் நடத்தும் இந்த நிகழ்வு பாராட்டத்தக்கது. சாதி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு சாதி ஒடுக்குமுறைகளுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டிய கடமையை உணர்த்துகிற நிகழ்வு இது.
ஒன்றாகப் படித்தோம், ஒன்றாக வாழ்கிறோம், நன்றாக இருக்கிறோம் என்று இளமையை கடக்க வேண்டிய எதிர்கால தலைமுறை, எப்படி இன்று தவறாக வழி நடத்தப்படுகிறது என்ற கவலை, அக்கறையோடு கூடி இருக்கிறோம்.
நாம் யாருக்கும் குடி அல்லோம் என்பதே உண்மையான ஆன்மீகம் என்று நான் கருதுகிறேன்.மண்டைக்காடு பிரச்சனையின் போது நானும் குன்றக்குடி அடிகளார் உடன் அங்கு சென்றேன். அங்குள்ள கோயிலில் நான் நுழைந்த போது என் தலைப்பாகையை அகற்றச் சொன்னார்கள். நான் மறுத்துவிட்டேன். எங்கள் தலைப்பாகை நாங்கள் சுய மரியாதைக்காக நடத்திய போராட்டத்தின் அடையாளம். அய்யா வழி வந்த எல்லோரும் அன்று கோயிலில் தலைப்பாகையுடன் நுழைந்தோம். மண்டைக் காட்டில் மோதி உயிர் நீத்தவர்கள் எல்லோரும் ஒடுக்கப்பட்டவர்கள். உயர் சாதியினர் யாராவது உண்டா? இந்த கேள்வியை அன்று நான் அந்த மக்களிடம் எழுப்பினேன். ஆனால் மதத்தின் பெயரால் ஒடுக்குமுறை நியாயப்படுத்தப்படுகிறது. தீண்டாமை, பாகுபாடு, வன்கொடுமை உள்ள எந்த மதமும் நற்சமயமாக இருக்க முடியாது.
பேய்கள் குடியிருக்கும் கூடாரம் என்று விவேகானந்தர் திருவிதாங்கூர் சமஸ்தானத்தை அழைத்தார். அந்த அரசர் சாதி பாகுபாடு இடம்பெற்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டுமென்று சொன்ன போது அந்த ஒப்பந்தத்தை கிழித்து எறிந்தவர் அய்யா வைகுண்டர். கோயிலில் கை படாமல், விரல் படாமல் பிரசாதம் வழங்குகிற நடைமுறையை தூக்கி எறிந்து தொட்டு நெற்றியில் நாமத்தை போடுகிற முறைமையை அய்யா வைகுண்டர் கொண்டு வந்தார். ஆகவே நான் இங்கு கலந்து கொள்வதே ஆன்மீகப் பணி என்ற அடிப்படையில்தான்.
இன்று ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக, பொருளாதார, அரசியல் வாழ்வு பற்றிய தரவுகள் தேவைப்படுகின்றன. சாதி வாரி கணக்கெடுப்பு என்றால் எதிர்ப்பு தெரிவிப்பது யார்? யார் சாதி ஆதிக்கம் நிலை பெற வேண்டுமென்று நினைக்கிறார்களோ அவர்களே சாதி வாரிக் கணக்கெடுப்பை எதிர்க்கிறார்கள். சாதி இருக்கிற வரை தீண்டாமை இருக்கும். சாதி அமைப்பை ஒழிக்க வேண்டும். நமது பயணம் அதை இலக்காக கொண்டு அமைய வேண்டும். தோள் சீலைப் போராட்டம் போன்ற எழுச்சிகளின் இலக்கு அதுதான். வரலாறு அறிந்தால் சாதியக் கட்டமைப்பு யாரால் பாதுகாக்கப்படுகிறது, ஏவப்படுகிறது என்பதை நம்மால் உணர முடியும். இளைய தலைமுறைக்கு நாம் சொல்ல வேண்டும். சாதி மறுப்பு திருமணங்கள் நமது குடும்பத்தில் நடந்தேற வேண்டும். நாம் ஊக்குவிக்க வேண்டும். ஒவ்வொரு மனிதரும் சாதியை கடந்து வர வேண்டும்.
அம்பேத்கர், பெரியார், அய்யா வைகுண்டர் ஆகிய பெரும் ஆளுமைகளின் சிந்தனை, செயல்பாடு நம்மை வழி நடத்த வேண்டும். பழங்கதை பேசுவதில் பயனில்லை. வரலாற்றின் முற்போக்கு அம்சங்கள் நம் உரையாடல்களில் இடம் பெற வேண்டும். அரசியல் நீதி, பொருளியல் நீதி, சமூக நீதி ஆகியன ஒரு சேர உறுதி செய்யப்பட வேண்டும். ஒற்றுமை உணர்வோடு முன்னேறுவோம். வெல்வோம். தமிழ்நாட்டை ஒடுக்குமுறை இல்லா மாநிலமாக மாற்ற சாதி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு மக்களை திரட்டுவோம். இந்தியாவுக்கே வழி காட்டுவோம்என்ற வேண்டுகோளை முன் வைத்து பாலபிரஜாபதி அடிகளார் சாதி கடந்த சமத்துவ முழக்க நிகழ்வை துவக்கி வைத்தார்.