districts

img

குண்டும் குழியுமாக கிடக்கும் கும்பகோணம் - தஞ்சாவூர் சாலை

பாபநாசம், செப்.2 - கடந்த சில நாட்களாக பெய்த மழையால் கும்ப கோணம் - தஞ்சாவூர் மெயின் சாலை ஆங்காங்கே குண்டும், குழியுமாக உள்ளது. கும்பகோணம் மகா மகத்தின் போது இந்தச் சாலை போடப்பட்டது. ஏற்க னவே இந்த சாலை மழைக் காலங்களில் குண்டும் குழியு மாவதும், இதைச் சீரமைக்க பேட்ச் ஒர்க் பெயரளவில் போடப்படுவதும், பின்னர் அடுத்த மழைக்கு குண்டும், குழியுமாவதும் வழக்கமாக உள்ளது.  இந்தச் சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. சாலை குண்டும் குழியுமாக இருப்பது  தெரியாமல், வாகன ஓட்டிகள் அதில் விழுந்து காயமடை கின்றனர். எனவே கும்பகோணம் - தஞ்சாவூர் மெயின் சாலையை விரிவுபடுத்தி தரமாக அமைக்க வேண்டும். அதுவரை இச்சாலையில் பேட்ச் ஒர்க்கை தரமானதாக போட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.