திருநெல்வேலி, ஜூன் 28 - தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி திருநெல்வேலி மாவட்ட கிளை யின் சார்பாக மாவட்ட கருவூல அலுவ லர் சாரா மார்க்ரெட்டை மரியாதை நிமித்தமாக சந்திக்க ப்பட்டது. இச்சந்திப் பின் போது மாவட்டம் முழுவதும் இருக்கக்கூடிய சார்நிலை கருவூ லங்களில் ஆசிரியர்களுடைய பணப் பலன் சார்பான கோரிக்கைகளுக்கு உட னுக்குடன் ஒப்புதல் வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. தொடர்ந்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியா ளர் டைட்டஸ்சை சந்தித்து திரு நெல்வேலி வருவாய் மாவட்டத்தில் திரு நெல்வேலி, சேரன்மாதேவி, வள்ளி யூர் மூன்று கல்வி மாவட்டங்கள் செயல் படுகின்றன. இம்மூன்று கல்வி மாவட்டங் களுக்கு உட்பட்ட அரசு நிதியுதவி பெறும் தனியார் பள்ளிகளில் பணிபுரி யும் ஆசிரியர்களுக்கு 2020 - 2021 மற்றும் 2021 - 2022 ஆண்டிற்கான பணி யாளர் நிர்ணய ஆணை நாளது தேதி வரை வழங்கப் படவில்லை.பொது வாக ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 30 ஆம் தேதியை கணக்கில் கொண்டு செப்டம்பர் மாதம் பணியாளர் நிர்ணய ஆணை வழங்கப்படும் .
ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக பணி யாளர் நிர்ணய ஆணை வழங்கப்படாத தால் ஆசிரியர்களை பணிநிரவல் செய்தல், பணியிட மாறுதல் செய்தல் மற்றும் பணி நியமனம் செய்வதில் பல்வேறு இடர்பாடுகள் உள்ளன. இதனால் தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மிகுந்த சிர மத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே உடனடியாக இரண்டு ஆண்டுகளுக் குரிய பணியாளர் நிர்ணய ஆணையை வழங்க வேண்டும் என கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. மேலும் வள்ளியூர் கல்வி மாவட்டத் தில் வள்ளியூர், களக்காடு மற்றும் நாங்குநேரி வட்டார பகுதிகளில் பணிபுரி யும் தனியார் பள்ளிகளுக்கு 2019 ஆம் ஆண்டுக்குரிய நிர்வாக மானியம் நாளது தேதி வரை 3 ஆண்டுகளாகியும் வழங்கப்படவில்லை .எனவே அதை யும் உடனடியாக பெற்று வழங்க வேண்டும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியா ளர் டைட்டசிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் மாநிலச் செயலாளர் பிரமநாயகம், மாவட்ட தலைவர் கம லேஷ், செயலாளர் பால்ராஜ், பொரு ளாளர் அமுதா ,மாநில செயற்குழு உறுப்பினர் அண்ணாதுரை ,மாவட்ட துணைத்தலைவர் வெனிஸ்ராஜ் இக்னேசியஸ் ,துணைச் செயலாளர் அகஸ்டின், திருநெல்வேலி கல்வி மாவட்ட தலைவர் உமையொரு பாகம், சேரன்மாதேவி வட்டாரச் செயலாளர் பவுல் உள்பட நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.