குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னி யாகுமரி, தென்காசி, விருதுநகர், மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங் களில் கனமழை கொட்டி வருகிறது.
குறிப்பாக, டிசம்பர் 17 அதிகாலை 2 மணிக்கு துவங்கி இடைவிடாது 24 மணி நேரத்திற்கும் மேலாக தொட ர்ந்து பெய்த கனமழை, நான்கு மாவட்ட ங்களையும் புரட்டிப் போட்டுள்ளது.
ஓராண்டு முழுவதும் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் கொட்டித் தீர்த்ததால், ஆறுகளில் பெருக்கெடுத்த வெள்ளம், நிரம்பி மறுகால் பாய்ந்த தால், ஏரிகள், கண்மாய்கள், குளங்களி லிருந்து வெளியேறிய தண்ணீர் குடி யிருப்புகளுக்குள் புகுந்துள்ளன. சாலைகள் மற்றும் தெருக்களிலும் ஒரு ஆள் மட்டத்திற்கும் அதிகமாக வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்கள் வெளியே வர முடியாமல் வீடு களுக்குள் முடங்கியுள்ளனர்.
பல பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. தொலைத் தொடர்பு இணைப்புக்களும் சரிவர கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.
அண்மையில், ‘மிக்ஜம்’ புயல் மழை யால் சென்னை உள்ளிட்ட 4 மாவட்ட மக்கள் அடைந்த துயரத்தை, கொஞ்ச மும் எதிர்பாராத வகையில் கன்னியா குமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மக்களும் தற்போது அடைந்துள்ளனர்.
வீடுகளின் முதல்தளம் வரை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்கள் மாடி களில் தஞ்சமடைந்துள்ளனர். வெளியே வரமுடியாமலும், உணவு, குடிநீரின்றி யும் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இயல்பை விட அதிகமான மழை
வடகிழக்கு பருவமழை குமரி மாவட்டத்தில் இயல்பை விட 103 சத விகிதமும், திருநெல்வேலியில் 135 சத விகிதமும், தென்காசியில் 80 சத விகிதமும், தூத்துக்குடியில் 68 சத விகிதமும் அதிகமாக பெய்துள்ளது. 24 மணி நேரத்தில் மட்டும் நெல்லையில் 39.12 செ.மீ, தூத்துக்குடியில் 37.96 செ.மீ, தென்காசியில் 20.68 செ.மீ, குமரியில் 11.8 செ.மீ. என மழை பதி வாகி உள்ளது. அதிகபட்சமாக காயல் பட்டினத்தில் 94.6 செ.மீ., திருச்செந்தூ ரில் 68.9 செ.மீ., திருவைகுண்டத்தில் 62.1 செ.மீ., கோவில்பட்டியில் 52.5 செ.மீ., சாத்தான்குளத்தில் 47.1 செ.மீ. என மழை கொட்டித் தீர்த்துள்ளது. இந்த அள விற்கான எதிர்பாராத மழையே, வெள்ளப் பாதிப்புக்கு காரணமாகியுள்ளது.
இந்நிலையில், பொதுமக்கள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள், தேவைப்படும் நிவாரண உதவிகள், மருத்துவ உதவிகள், மீட்பு நடவடிக்கை கள் குறித்து தமிழ்நாடு அரசின் வாட்ஸ்அப் எண்: 8148539914 மற்றும் (http://twitter.com/tn_rescuerelief (Username - @tn_rescuerelief)” என்ற “டுவிட்டர்” மூலமாக தெரிவிக்கலாம். மேலும், @tn_rescuerelief, @tnsdma என்ற டுவிட்டர், @tnsdma என்ற முகநூல் பக்கத்திலும் மழை பாதிப்பைக் குறித்துப் பதிவிடலாம். மாவட்ட அவசர கால செயல்பாட்டு மையங்களை மக்கள் தொடர்பு தனியாக திருநெல் வேலிக்கு 1077, 0462 2501012 என்ற எண்களையும், தூத்துக்குடி மாவட்டத் திற்கு 1077, 0461 2340101 என்ற எண்களையும் தொடர்பு கொள்ளலாம் என அறிவித்துள்ள தமிழ்நாடு அரசு, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய 4 மாவட்டங்களுக்கு, 9 அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப் பினர்களையும், அரசு அதிகாரி களையும், மீட்புப் படையினரையும் அனுப்பி வைத்துள்ளது.
மீட்பு - நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வரும் 9 அமைச்சர்கள்
முதற்கட்டமாக, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பொது மக்களை மீட்பது, அவர்களுக்கு அவசர கால உதவிகளை வழங்குவது உள்ளிட்ட பணிகளுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சமூக நலன் - மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி. கீதா ஜீவன், மீன்வளம் - மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர். ராதா கிருஷ்ணன், பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோ ரை அனுப்பிவைத்த தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், பின்னர் மீட்புப் பணிகளை துரிதப்படுத்தி விரை வுப்படுத்த கூடுதலாக பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு, இளைஞர் நலன் மற்றும் விளை யாட்டு மேம்பாட்டுத் துறை அமைச் சர் உதயநிதி ஸ்டாலின், பிற்படுத்தப் பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன், வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி ஆகிய அமைச்சர்களையும் நான்கு மாவட்டங்களுக்கு பொறுப் பாக நியமித்துள்ளார்.
இவர்கள் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கும் பணிகளையும், நிவாரண உத விகள் வழங்குவதுடன், வெள்ளத்தை மிகவிரைவில் வடியச் செய்வதற்கான பணிகளிலும் ஈடுபட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளச் சேதத்தைப் பார்வையிட்ட கனிமொழி கருணாநிதி எம்.பி, தனது வாட்ஸ்ஆப் செயலி மூலம் மருத் துவம், உணவு உள்ளிட்ட அவசர உத விக்கு +91 80778 80779 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளுமாறு அறிவித்துள்ளார்.
சென்னை அனுபவத்தை பயன்படுத்தி காப்போம்
முன்னதாக கோயம்புத்தூர் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முதல்வர் மீட்கப்பட்டுள்ளது. அதே போல் மேலப்பாளையம் நடராஜபுரம் பகுதியில் பட்டத்தி என்ற 75 வயதான மூதாட்டி வீடு இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.
மு.க. ஸ்டாலின், “சென்னையில் கிடைத்த அனுபவத்தை பயன்படுத்தி தென்மாவட்ட மக்களை காப்போம்; இது உறுதி” என தெரிவித்தார்.
“அதி கனமழையால் பாதிக்கப் பட்டுள்ள தென் மாவட்டங்களின் நிலை குறித்து நேற்று முதல், அமைச்சர் களுடனும் அரசு உயர் அதிகாரிகளுடன் தொடர்ந்து பேசியும் - மீட்பு மற்றும் நிவா ரணப் பணிகளைக் கண்காணித்துக் கொண்டும் இருக்கிறேன்.
மழையால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த கழகத் தோழர்கள், உடனடியாகக் களத்தில் பொதுமக்களுக்கு உதவிட வேண்டும் என்றும் - நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளுக்குத் துணை நிற்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி யுள்ளேன்” என டுவிட்டர் பக்கத்திலும் பதி விட்ட முதல்வர், நான்கு மாவட்ட ஆட்சித் தலைவர்களுடனும் காணொலி முறை யில் ஆலோசனை நடத்தி உரிய உத்தரவு களைப் பிறப்பித்தார்.
மீட்புப் பணியில் முப்படைகள்
திங்களன்று காலை செய்தியாளர் களைச் சந்தித்த தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, “நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களில் மீட்புப்பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 12 ஐஏஎஸ் அதிகாரிகள் களத்தில் உள்ளனர். தேசிய பேரிடர் மீட்புப் படையைச் சார்ந்த 425 பேர் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து சுமார் 7,500 பேர் மீட்கப்பட்டு ஆங்காங்கே அரசு சார்பில் அமைக்கப் பட்டுள்ள 84 முகாம்களில் தங்கவைக்கப் பட்டுள்ளனர்.
வெள்ள மீட்பு பணிகளுக்காக கூடுதல் படகுகள் அனுப்பப்பட்டுள்ளன. 4 மாவட்டங்களில் மீட்புப்பணிகளுக்காக ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய முப்படைகளின் உதவியை தமிழக அரசு கோரியுள்ளது” என்று தெரிவித் திருந்தார்.
மேலும், வெள்ளம் சூழ்ந்த பகுதி யிலுள்ள மக்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் உணவு விநியோகிக்க திட்டமிடப் பட்டுள்ளதாகவும், உணவு விநியோகம் செய்ய சூலூர் விமானப்படை தளத்தி லிருந்து ஹெலிகாப்டர் உதவி கோரப் பட்டுள்ளதாகவும் கூறியிருந்தார்.
அதனடிப்படையில், கடலோர காவல் படைக்கு சொந்தமான சுஜேய், வைபவ், விக்ரம் ஆகிய 3 கப்பல்கள் தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தயாராக நிறுத்தப்பட்டுள்ளன.
மழை நின்ற பிறகே ஹெலிகாப்டர் மூலம் மீட்பு
சுஜேய் கப்பலில் ஹெலிகாப்டர் வசதி உள்ளதால் அதன் மூலம் மீட்பு பணிகள் தொடங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
தென் மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஹெலி காப்டர் பறப்பதற்கு சாதகமான சூழல் இன்னும் அமையவில்லை என்று கட லோர காவல்படை தெரிவித்துள்ளது. வானிலை சரியான பின்பு ஹெலி காப்டர் மூலம் மீட்பு பணியானது தொடங் கப்படும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.
தென் மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஹெலி காப்டர் பறப்பதற்கு சாதகமான சூழல் இன்னும் அமையவில்லை என்று கட லோர காவல்படை தெரிவித்துள்ளது. வானிலை சரியான பின்பு ஹெலி காப்டர் மூலம் மீட்பு பணியானது தொடங் கப்படும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.
தென் மாவட்டங்களுக்கான போக்கு வரத்து சேவைகளைப் பொறுத்த வரை, சென்னையில் இருந்து தூத்துக் குடி, திருநெல்வேலி, நாகர்கோவில் ஆகிய பகுதிகளுக்கு இயக்கப்படும் பேருந்துகள் இன்று இரவு (18)வழக்கம் போல் இயக்கப்படும். அவை கோவில்பட்டி வரை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது” என்றும் கூறினார்.
இன்றும் 3 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு
இதனிடையே குமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசிக்கு கொடுக்கப் பட்ட ரெட் அலர்ட் அடுத்த 24 மணி நேரத்திற்கு தொடர்கிறது என இந்திய வானிலை ஆய்வு மையத் தலைவர் பால சந்திரன் எச்சரித்துள்ளார்.
மேலும், “குமரிக்கடல் மன்னார் வளைகுடா மற்றும் தென் தமிழக கடற்கரை பகுதிகளில் 40 முதல் 42 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்ப தால் இந்த பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ள பாலசந்திரன், தமிழகம், புதுவை, காரைக் கால் பகுதிகளில் கடந்த அக்டோபர் 1 முதல் டிசம்பர் 18 வரையிலான கால கட்டத் தில் பதிவான மழை அளவு 44 செ.மீ. என்றும், இந்த காலகட்டத்தின் சராசரி அளவு 42 சென்டிமீட்டர் என்ற நிலையில், தற்போது இயல்பை விட ஐந்து சதவிகி தம் அதிக மழை பெய்துள்ளது.
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக முதன்முறையாக வரலாறு காணாத மழை பெய்துள்ளது” என்றும் குறிப்பிட்டுள்ளார்
பிரதமரை நேரில் சந்தித்து முறையிடும் முதல்வர்
‘மிக்ஜம்’ புயல் வெள்ளத்தால், சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களும், தற்போது வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கன்னியாகுமரி, திரு நெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களும் பெரும் வெள்ளச் சேதத்தை எதிர்கொண்டுள்ளன. மிக்ஜம் புயல் பாதிப்புக்கு முதற்கட்ட நிவா ரணமாக ரூ. 5060 கோடி நிதி கேட்டிருந்த நிலையில், ஒன்றிய அரசு ரூ. 450 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்தது. தற்போது தென்மாவட்டங்களும் கடும் பாதிப்பைச் சந்தித்துள்ள நிலையில், இதிலிருந்து மீள ஒன்றிய அரசின் உதவி முக்கிய மாகும். எனவே, இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேச முதல்வர் மு.க. ஸ்டாலின் முடிவு செய்துள் ளார். இதுதொடர்பாக பிரதமரின் நேரத்தைக் கேட்டு, தமிழக அரசின் சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது.