திருநெல்வேலி, பிப். 19- நெல்லை மாவட்டத்தில் தேர்தல் அமைதியான முறை யில் நடந்து கொண்டிருப்ப தாக காலையில் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தெரி வித்தார். நெல்லை மாவட்ட ஆட்சி யர் விஷ்ணு பாளையில் உள்ள ஒரு பள்ளியில் சனிக்கிழமை வாக்களித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:நெல்லை மாவட்டத்தில் ஒரு மாநக ராட்சி, 3 நகராட்சி, 17 பேரூ ராட்சிகளுக்கு இன்று தேர்தல் நடத்தப்படுகிறது. இதற்காக 933 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள் ளது. இங்கு அமைதியாக வும், நேர்மையாகவும் வாக் குப்பதிவு நடந்து வருகிறது.பதற்றமான வாக்குச் சாவடி களுக்கு கூடுதல் கண்கா ணிப்பு ஏற்பாடு செய்யப்பட் டுள்ளது. பதற்றமான 100 வாக்குச்சாவடிகளை கண் காணிக்க நுண்பார்வையா ளர்கள் நியமிக்கப்பட்டுள்ள னர்.அனைத்து வாக்குச் சாவடிகளும் சி.சி.டி.வி. காமிரா மூலம் வீடியோ பதிவு செய்யப்படுகிறது. 218 வாக்குச் சாவடிகளில் இணையதளம் மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டு அலுவலர்கள் கண்காணித்து வருகிறார்கள். தேர்தல் ஆணையம் உத்தரவுப்படி நேர்மையாக தேர்தல் நடத்தப்பட்டு வரு கிறது. சில வாக்குச்சாவடி களில் எந்திர கோளாறு கார ணமாக சிறிய பிரச்சனை கள் ஏற்பட்டது. அங்கு உடனுக்குடன் என்ஜினீயர் கள் அனுப்பப்பட்டு பழுது கள் சரி செய்யப்பட்டது. ஒவ் வொரு வாக்குச் சாவடிக ளிலும் 1,200-க்கு குறைவான வாக்காளர்கள் உள்ளதால் வாக்களிக்க கூடுதல் நேரம் தேவைப்படாது. இவ்வாறு அவர் கூறினார்.