districts

img

தேசிய கீதம் பாடி மூடப்பட்ட துவக்கப்பள்ளி மாஞ்சோலை மலைப்பகுதியில் சோகம்

திருநெல்வேலி ஆக 23- நெல்லை  மாவட்டம் மாஞ்சோலை தேயிலைத்  தோட்ட தொழிலாளர்களின் குழந்தைகள் பயின்ற  நாலுமுக்கு தொடக்க பள்ளி தற்போது பயில்வ தற்கு குழந்தைகள் இல்லாததால் மூடும் நிலைக்கு  தள்ளப்பட்டுள்ளது.  தனியார் தேயிலைத் தோட்ட நிர்வாகம்  பிபிடிசி தங்களது அனைத்து செயல்பாடுகளை யும் நிறுத்திவிட்ட நிலையில் மலைப்பகுதியில் வசிப்பவர்கள் சமவெளி பகுதிக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்ட நிலையில் சென்னை உயர்நீதி  மன்றத்தின் மதுரை கிளையில் வரும் 29ஆம் தேதி இந்த வழக்கின் விசாரணையை எதிர்பார்த்து தொழிலாளர்கள் காத்திருக்கின்றனர்.  

இதற்கிடையே 1994 ஆம் ஆண்டு இயற்கை எழில் சூழ்ந்த மலை பகுதிக்கு இடையே அமைந் துள்ள நாலு முக்கு தொடக்க பள்ளியில் ஒன்றாம் வகுப்பு பயின்ற முன்னாள் மாணவர்கள் மாணவி கள் சுமார் 15 பேர் 30 வருடங்களுக்கு முன்பாக தாங்கள் ஒன்றாம் வகுப்பில் படித்த நாலுமுக்கு பள்ளி மூடப்படுவதை அறிந்து அனைவரும் சேர்ந்து இந்தப் பள்ளிக்கு மீண்டும் வந்தனர். 1994 ஆம் ஆண்டு முதல் 99 ஆம் ஆண்டு வரை  ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை  இந்த பள்ளியில் பயின்ற இந்த மாணவ மாணவி கள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் வெளி நாடுகளிலும் வசித்து வருகின்றனர்.

மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலா ளர்களின் தற்போதைய பிரச்சனை குறித்து கேள்விப்பட்ட இவர்கள் மேற்கு தொடர்ச்சி மலைப்  பகுதியில் உள்ள நாலுமுக்கு பகுதி மூடப்பட்டால் தங்களது பள்ளியை மீண்டும் பார்ப்போமா என்ற ஏக்கத்துடன் ஒருமுறையாவது தாங்கள் படித்த  பள்ளியை பார்த்து விட வேண்டும் என்ற எண்ணத் தில் தாங்கள் படித்த பள்ளிக்கு வந்து சேர்ந்த னர். முன்னாள் மாணவர்கள் அனைவரும் தாங்கள்  பயின்ற பள்ளிக்கு வந்திருந்து தங்களது தொடக் கப்பள்ளி கால நினைவுகளை மகிழ்ச்சியுடன் அசை போட்டனர்.

மாஞ்சோலை தேயிலைத் தோட்ட  தொழிலாளர்களின் பிரச்சினையால் தற்போது கல்வி கற்க குழந்தைகள் எதுவும் வராததால் இந்த  பள்ளி வெகு விரைவில் மூடப்படும் என்ற தகவல்  அவர்களுக்கு மிகுந்த கவலை அளித்ததாக தெரி வித்தனர்.

இயற்கை எழில் சூழ்ந்த மலைகளுக்கு இடையே முப்பது வருடங்களுக்கு முன்பு தாங்கள் துள்ளித் திரிந்து விளையாடி மகிழ்ந்து தொடக்கக் கல்வியை பயின்ற பள்ளியை சுற்றி சுற்றி வந்தனர். அரசு நிதி உதவி  பெறும் தனியார் தேயிலைத் தோட்ட  நிர்வாகத்துடன் இணைந்த இந்த தொடக்கப் பள்ளி ஆனது 1947 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டுள் ளது. ஆயிரக்கணக்கான தேயிலைத்  தோட்ட தொழிலாளர்களின் குழந்தைகளும்  அருகில் உள்ள மின்வாரிய குடியிருப்பில் உள்ள வர்களின் குழந்தைகளும் இணைந்து ஜாதி  மதம் மொழி என எந்த வேறுபாடும் இன்றி  தங்களது தொடக்க கல்வியை இந்த பள்ளியில் பயின்றதாக இந்த முன்னாள் மாணவ மாண விகள் குறிப்பிட்டனர் - மேஜை நாற்காலி  மாணவர்கள் அமரும் இருக்கை என எதுவும் இல்லாத தற்போதைய பள்ளியின் நிலையை பார்த்து கண்ணீர் சிந்திய இந்த முன்னாள் மாண வர்கள் இருக்கும் ஒன்று இரண்டு டெஸ்க்கினை எடுத்து போட்டு அதில் அமர்ந்து தங்களது பெயர்களை கரும்பலகையில் எழுதினர்.

 1994 மீண்டும் மாணவர்கள் சந்திப்பு என கேக்கில் எழுதி அதை வெட்டி கொண்டாடினர் - மாஞ்சோலை நாலு முக்கு மேற்கு தொடர்ச்சி மலை களுக்கு இடையே அமைந்திருக்கும் பள்ளியின் புகைப்படத்தினை நினைவலைகளாக ஒவ்வொரு வருக்கும் நினைவு பரிசுகளை வழங்கிக் கொண்ட னர். 30 வருடங்களுக்கு முன்பாக தங்களுக்கு பாடம் நடத்திய நான்கு ஆசிரியர்கள் ஆன அருள்  சார் துரைராஜ் சார் சண்முகவேல் சார் பிச்சம்மாள்  டீச்சர் என நான்கு பேரை குறித்தும் பேசி மகிழ்ந்த னர்.

 தாங்கள் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை 28 மாணவர்கள் சேர்ந்து படித்த தாக நம்மிடம் தெரிவித்தனர் - இதில் தற்போது 15  பேர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டதாகவும் இந்த சந்திப்பு இந்தப் பள்ளி வளாகத்தில்  தங்க ளது இறுதியான நேரடி சந்திப்பாக இருக்கும் என வும் வருத்தத்துடன் தெரிவித்தனர். 30 வருடங்களுக் குப் பிறகு தாங்கள் மீண்டும் சந்தித்தது மிகுந்த  மகிழ்ச்சியை கொடுத்தாலும் தாங்கள் படித்த பள்ளி  தற்போது மூடும் நிலையில் இருப்பதை எண்ணி கண்கலங்கிய இந்த முன்னாள் மாணவர்கள் ஜன கன மன என தேசிய கீதம் பாடி இந்தப் பகுதியை  விட்டு நீங்கா நினைவலைகளுடன் திரும்பி சென்ற னர்.