districts

காணும் பொங்கலையொட்டி சுற்றுலா தலங்களில் குவிந்த பொதுமக்கள்

திருநெல்வேலி, ஜன. 16- தமிழகம் முழுவதும் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வரு கிறது. சென்னை போன்ற வெளி மாவட்டங்களில் பணி செய்து வருப வர்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு வந்துள் ளார்கள். திங்கட்கிழமை மாட்டுப்பொங்கல் சிறப்பாக கொண்டாடப்பட்டது. நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் தைப் பொங்கலுக்கு மறுநாள் காணும் பொங்கலாக கொண் டாடப்பட்டு வருகிறது. இதைத்தொ டர்ந்து பொதுமக்கள் சுற்றுலா தலங்க ளில் அதிக அளவில் குவிந்தனர்.  களக்காடு தலையணை, அகஸ்தி யர் அருவி, பாபநாசம் கோவில், சொரி முத்து அய்யனார் கோவில், கடனா, ராமநதி அணைகள் மற்றும் குற்றால அருவிகளில் திங்கட்கிழமை பொது மக்கள் குடும்பத்துடன் குவிந்தனர். அவர்கள் வீட்டில் சமைத்த உணவுக ளை சுற்றுலா தலங்களுக்கு எடுத்து சென்று அங்கு குடும்பத்துடன் அமர்ந்து சாப்பிட்டு காணும் பொங்கலை உற்சா கமாக கொண்டாடினர்.  இதேபோல் நெல்லை மாநகர் பகுதி களில் உள்ள மாவட்ட அறிவியல்  மையம், தாமிரபரணி ஆற்றங்கரையோ ரங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்க ளிலும் திங்களன்று அதிக அளவு மக்கள் கூட்டம் காணப்பட்டது. பொங்கல் பண்டியையொட்டி  பல்வேறு இடங்களி லும் விளையாட்டு போட்டிகள் நடை பெற்றது. இதில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கலந்து கொண்ட னர். போட்டியில் வெற்றி பெற்றவர்க ளுக்கு பரிசுகளும் வழங்கப் பட்டது. காணும் பொங்கலை யொட்டி நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் பெரும்பாலான கடை கள் அடைக்கப் பட்டிருந்தது. சுற்றுலா  தலங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.