districts

img

மும்பை - திருவனந்தபுரம் விரைவு ரயிலை நெல்லை வரை நீட்டிப்பு செய்ய வேண்டுகோள்

திருநெல்வேலி, ஏப். 8- திருநெல்வேலி நாடாளு மன்ற உறுப்பினர் சா. ஞானதிரவியம் தில்லியில் ஒன்றிய ரயில்வே அமைச்சர் .அஸ்வினி வைஷ்ணவை சந்தித்து தென்பகுதிகளுக்கு பல ரயில்களை இயக்கக் கோரிக்கை மனு வழங்கி னார். அந்த மனுவில், தற்போது நாகர்கோவில்-தாம்பரம் ரயில் வாரம் மும் முறை இயங்கி வருகின்றது.  நாகர்கோவில்-திருநெல் வேலி-மதுரை-சென்னை மார்க்கத்தில் இயக்கப்படும் அனைத்து ரயில்களும் காத்திருப்போர் பட்டியலு டன் முழு அளவில் பயணி கள் ஏற்றிச் செல்வதுடன் அதிக அளவில் வருவாய் கிடைத்து வருகிறது. இத னால் இந்த தடத்தில் பல்வேறு பெயர்களில் அதிக  கட்டணத்தில் சிறப்பு ரயில் களை இயக்கி அதிக வரு வாயை ஈட்டி வருகின்றது. வேறு ரயில்கள் இல்லாத கார ணத்தால் பயணிகள் அதிக  கட்டணத்துடன் சிறப்பு  ரயில்களில் பயணம் செய்கின் றனர். தென்மாவட்ட பயணி கள் அதிக அளவில் நிரந்திர தினசரி ரயில் வசதியை எதிர்பார்க்கிறார்கள். 22657/22658 நாகர்கோவில்-தாம்பரம் மற்றும் 12689 /12690 ஆகிய இரண்டு ரயில்க ளும் தினசரி ரயில்களாக இயக்கும் திட்டம்  தெற்கு ரயில்வேயால் ரயில்வே வாரியத்துக்கு அனுப்பபட்டு திட்டம் கிடப்பில் உள்ளது. எனவே ரயில்வே வாரியம்  இந்த இரண்டு ரயில்களை யும் தினசரி ரயில்களாக இயக்க உடனே நிறைவேற் றக் கேட்டுக் கொள்கிறேன்.

தாமிரபரணி எக்ஸ்பிரஸ் பெயர் சூட்டுக!
சேரன்மகாதேவி, அம்பா முத்திரம், கீழக்கடையம், பாவூர்சத்திரம், ஆகிய பகுதி களிலிருந்து சென்னைக்கு நேரடி ரயில் வசதி தற்போது  இல்லை. எனது கோரிக் கையை ஏற்று திருநெல் வேலி-தாம்பரம்- வழி சேரன் மகாதேவி, அம்பாமுத்திரம், கீழக்கடையம், பாவூர்சத்தி ரம், தென்காசி வழியாக வாரம் ஒருமுறை சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த வழித்தடத்திலும் இயங்கும் சிறப்பு ரயிலால் அதிக வரு வாய் கிடைத்து வருகின்றது.  எனவே மேற்கண்ட ரயி லுக்கு ‘தாமிரபரணி எக்ஸ்பி ரஸ்” என பெயர் சூட்டி இந்த  தடத்தில் நிரந்தர ரயிலாக இயக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். கன்னியா குமரியி லிருந்து இருந்து மும்பை சென்று கொண்டிருந்த வண்டி  எண்.16381/16382 ரயில் பூனே வரைதான் இயக்கப்பட்டு வருகிறது. திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து மும்பை செல்லும் பயணிகள் இத னால் மிகவும் பாதிக்கப் படுகிறார்கள். தடம் எண்.163 45/16346 லோக்யமான்ய திலக்-திருவனந்தபுரம் நேத்ராவதி எக்ஸ்பிரஸ் ரயில்  தற்போது திருவனந்தபுரம் வரை இயக்கப்படுகிறது. இந்த ரயிலை திருநெல்வேலி  வரை இயக்க வேண்டும் என்று பலமுறை கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. எனவே இவ்வாறு ரத்து செய் யப்பட்ட மும்பை ரயிலுக்கு பதில் தடம் எண்.16345/16346 லோக்யமான்யதிலக்-திரு வனந்தபுரம் நேத்ராவதி எக்ஸ்பிரஸ் ரயிலை நாகர் கோவில் டவுண் வழியாக திரு நெல்வேலி வரை நீட்டிக்க வேண்டும்.

அதே போல் தற்போது சென்னையிலிருந்து ஹைத ராபாத்திலிருந்து தினசரி மூன்று ரயில்கள் இயக்கப்படு கின்றன. தென் மாவட்டங்களி லிருந்து ஹைதராபாத்துக்கு தினசரி ரயில்சேவை தற்போது இல்லை. ஆகவே மேற்கண்ட 3 ரயில்களில் ஏதாவது ஒன்றினை திருச்சி, மதுரை, திருநெல்வேலி வழி யாக கன்னியாகுமரி வரை  நீட்டிக்க வேண்டும். இவ் வாறு இயக்குவதால் தென் தமிழ்நாட்டில் சுமார் 15  மாவட்ட மக்கள் பயன்பெறு வர். தென்மத்திய ரயில்வே மண்டலம் சார்பாக எண். 12759/12760 சார்மினார் அதி  வேக ரயிலை மதுரை, திரு நெல்வேலி வழியாக கன்னி யாகுமரி வரை  நீட்டிக்க திட்டம் இருப்பதாகவும் இந்த  நீட்டிப்புக்கு தெற்கு ரயில்வே  முட்டுகட்டை போட்டு வருவ தாக அறிய வருகிறேன். அந்த  அதிவேக சார்மினார் ரயி லான 12759/12760 ரயிலை சென்னையிலிருந்து விழுப்பு ரம், திருச்சி, மதுரை, திரு நெல்வேலி வழியாக கன்னி யாகுமரிக்கு நீட்டிப்பு செய்து  இயக்கிட நடவடிக்கை எடுக்க  கேட்டுக் கொள்கிறேன்.  மேலும் தடம் எண். 16791/16792 திருநெல்வேலி- பாலக்காடு பாலருவி விரைவு  ரயிலுக்கு கோவிட் பெருந் தொற்றுக்கு முன் கீழக்கடை யம் மற்றும் பாவூர் சத்திரம் ரயில் நிலையங்களில் நிறுத் தம் இருந்தது. தற்போது  கோவிட் பெருந்தொற்றுக் குப் பிறகு மேற்கண்ட பகுதி களில் நிறுத்தம் அளிக்கப்ப டாமல் இயங்கி வருகின்றது. இந்த பாலருவி விரைவு ரயி லுக்கு கீழக்கடையம் மற்றும்  பாவூர் சத்திரம் ரயில் நிலை யங்களில் இருமார்க்கங்களி லும் நிரந்தர நிறுத்தம் மீண்டும் அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

கோவிட் பெருந் தொற்றுக்கு முன் திருநெல் வேலி-திருச்செந்தூர் பய ணிகள் ரயில் தினம் 6 முறை களும், திருநெல்வேலி –செங்கோட்டை பயணிகள் ரயில் தினம் 4 முறைகளும், திருநெல்வேலி-தூத்துக்குடி பயணிகள் ரயில் தினம் 2 முறையும் இயக்கப்பட்டு வந்தன. அவற்றை மீண்டும் அதே போல் இயக்கிட வேண்டியது மிகவும் அவசிய மானதாகும். மேலும் திருநெல்வேலி –  நாகர்கோவில், நாகர்கோ வில் - திருவனந்தபுரம் ஆகிய  வழித்தடங்களில் இயங்கும் பயணிகள் ரயில்களை இணைத்து ஒரே ரயிலாக  திருநெல்வேலி – திருவனந் தபுரம் என்றும், திருநெல் வேலி – செங்கோட்டை, செங் கோட்டை – கொல்லம் என  இரண்டு தடங்களில் தனித்தனியாக இயங்கும் பயணிகள் ரயில்களை இணைத்து ஒரே ரயிலாக திருநெல்வேலி – கொல்லம் என ஒருங்கிணைத்து ரயில்  இயக்கிடவும் நான் வலு வாக தங்களிடம் கோரிக்கை  வைக்கிறேன், இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.