திருநெல்வேலி, மே 6- பாட்டியை சரிவர எங்களால் பரா மரிக்க முடியாத காரணத்தால் பெட் ரோல் ஊற்றி எரித்துக் கொன்றதாக கைதான பேத்தி வாக்குமூலம் அளித்துள் ளார். நெல்லை அருகே உள்ள பேட்டை ஆதம்நகர் எதிரே கடந்த 3ந்தேதி பெண் எரித்துக்கொலை செய்யப்பட்டு கிடந்தார்.இதுதொடர்பாக பேட்டை இன்ஸ்பெக்டர் ஹரிகரன் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிராக்களை ஆய்வு செய்து விசா ரணை நடத்தி வந்தனர்.இதில், கொலை செய்யப்பட்ட பெண் பழையபேட்டை கண்டியபேரியை சேர்ந்த சுப்பம் மாள்(வயது 90) என்பதும், அவரது பேத்தியே பெட்ரோல் ஊற்றி அவரை எரித்துக்கொலை செய்ததும் கண்டு பிடிக்கப்பட்டது.இதையடுத்து சுப்பம்மாளின் மகள்வழி பேத்தி களான, கண்டியபேரியை சேர்ந்த மாரி யம்மாள்(40), பேட்டை செக்கடியை சேர்ந்த மேரி(38) ஆகியோரை போலீ சார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணை யில் மாரியம்மாள் கூறுகையில், வயது முதிர்வின் காரணமாக எங்களது பாட்டிக்கு உடல்நிலை மிகவும் மோச மாகி விட்டது. இதனால் அவரை சரிவர எங்களால் பராமரிக்க முடியவில்லை. இதையடுத்து அவரை கொலை செய்ய முடிவு செய்தேன். அதனை எனது தங்கை யிடம் தெரிவித்தேன். ஆனால் அவள் வேண்டாம் என்று கூறினாள். நான் அவளை கட்டாயப்படுத்தி சம்மதிக்க வைத்தேன். ஆனாலும் அதன்பின்னர் அவள் வேண்டாம் என்று கூறிவிட்டாள். சம்பவத்தன்று நான் பாட்டியை ஒரு ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு காட்டுப் பகுதிக்குள் சென்றேன். அங்கு பெட் ரோல் ஊற்றி எரித்தேன் என்றார். இதனை போலீசார் வாக்குமூலமாக பதிவு செய்து கொண்டனர்.கொலை பற்றி அறிந்தும் அதனை போலீசாரிடம் தெரிவிக்காததால் மேரியும் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரி வித்தனர்.பின்னர் மாரியம்மாள், மேரி ஆகிய 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கொக்கிரகுளத்தில் உள்ள மகளிர் சிறையில் அடைத்தனர்.