திருநெல்வேலி, ஜூலை 6- அரசு நிதி உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்களுக்கும் பணி மேம்பாட்டு ஊதியம் மற்றும் நிலுவைத் தொகை யை உடனடியாக வழங்கக்கோரி பாளையங்கோட்டை சித்த மருத்து வக் கல்லூரி அருகில் சனிக்கிழமை யன்று மூட்டா அமைப்பு சார்பில் உண் ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது
இந்த போராட்டத்திற்கு மூட்டா மூன் றாம் மண்டல தலைவர் ஹெய்ஸ்தாசன், 4 ஆம் மண்டல தலைவர் ஐசன் சோபன் ராஜ் ஆகியோர் தலைமை தாங்கினர். முன்னாள் தலைவர் ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்துப் பேசினார். சிஐ டியு மாவட்டச் செயலாளர் ஆர்.முரு கன், ஏஐடியுசி தலைவர் ரங்கன் ,தமிழ் நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலை வர் வீ.பார்த்தசாரதி, அரசு போக்கு வரத்து தொழிலாளர் சங்க பெருமாள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் க.ஸ்ரீராம் ஆகியோர் ஆத ரித்துப் பேசினர். மூட்டா பொருளாளர் ராஜ ஜெயசேகர் ,மூன்றாம் மண்டல செயலாளர் சிவஞானம், நான்காம் மண்டல பொருளாளர் ராஜ், நான்காம் மண்டலம் செயலாளர் ஜேம்ஸ் ஆகி யோர் பேசினர். பொதுச் செயலாளர் நாக ராஜன் நிறைவுரையாற்றினார்.நூற் றுக்கணக்கான ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.