districts

img

நெல்லை வாக்குச்சாவடிகளில் தேர்தல் பார்வையாளர் ஆய்வு

திருநெல்வேலி, பிப். 19- நெல்லை மாவட்டத்தில் நடைபெற்று வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை தேர்தல் பார்வையாளர் மகேஷ்வரன் சனிக்கிழமை ஆய்வு செய்தார். நெல்லை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை கண்காணிக்க மேலிட பார்வையாளராக மகேஸ்வரன் நியமிக்கப் பட்டுள்ளார்.  இதைத் தொடர்ந்து அவர் சனிக்கிழமை பல்வேறு இடங்களில் வாக்குச் சாவடிகளுக்கு சென்று ஆய்வு செய்தார்.  சந்திப்பு ம.தி.தா. இந்து மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடிக்கு சென்ற அவர் வாக்காளர்களுக்கு கையுறை, சானிடைசர்கள் வழங்கப்படுகிறதா என கண்காணித்தார். தொடர்ந்து வாக்குச் சாவடிகளில் போலீஸ் பாதுகாப்பு குறித்தும், விதிமுறையின்படி தேர்தல் நடைபெறுவதை யும் கண்காணித்தார்.