திருநெல்வேலி, மே 20- நெல்லை, தென்காசி மாவட்டங் களில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக குளிர்ந்த காற்றுடன் அவ் வப்போது சாரல் மழை பெய்து வரு கிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி யிலும், அணைப்பகுதியிலும் கன மழை பெய்கிறது. இதனால் நெல்லை, தென்காசி மாவட்டங்க ளில் உள்ள அணைகளின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வரு கிறது.தொடர்ந்து அம்பை, களக்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதி களிலும் அவ்வப்போது சாரல் மழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகு தியில் பெய்த கனமழை காரணமாக நெல்லை மாவட்டத்தின் பிரதான அணையான பாபநாசம் அணை நீர்மட்டம் 5 அடி உயர்ந்தது. இதேபோல் 118 அடி உயரம் கொண்ட மணிமுத்தாறு அணை யின் நீர்மட்டம் 83.30 அடியாக உள் ளது. அணைக்கு விநாடிக்கு 487 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக் கிறது.மலைப்பகுதியில் கனமழை காரணமாக மணிமுத்தாறு அருவி க்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் சுற்றுலா பயணிகள் நலன் கருதி வியாழக்கிழமை குளிக்கத் தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வெள்ளிக் கிழமை தண்ணீர் வரத்து மேலும் அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற் பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து மணிமுத்தாறு அருவியில் குளிக்க வெள்ளிக்கிழமை 2வது நாளாக தடை விதித்து வனத்துறை உத்தர விட்டுள்ளது. இதனால் மணி முத்தாறு அருவியில் சற்று தொலை வில் இருந்து சுற்றுலா பயணிகள் ரசித்து சென்றனர்.
சிலர் அங்கு ஆர்ப் பரித்து கொட்டும் தண்ணீரை தங்க ளது செல்போனில் படம் பிடித்து சென்றனர். தென்காசி மாவட்டத்திலும் பல் வேறு இடங்களில் மழை பெய்தது. அணைப்பகுதியில் பெய்த மழை காரணமாக ராமநதி அணை நீர்மட்டம் ஒரேநாளில் 12 அடி உயர்ந்தது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை மேலும் 8 அடி உயர்ந்து 45 அடியாக உள்ளது.இதே போல் 85 அடி உயரம் கொண்ட கட னாநதியில் நீர்மட்டம் வெள்ளி யன்று 5 அடி உயர்ந்து 35 அடியாக உள்ளது. அடவிநயினார் அணை நீர்மட்டம் 1½ அடி உயர்ந்து 48 அடி யாக உள்ளது. இதேபோல் கருப்பாநதி அணை நீர்மட்டம் 38.56 அடியாகவும், குண் டாறு அணை நீர்மட்டம் 17.12 அடியா கவும் உயர்ந்துள்ளது.மேற்கு தொ டர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து மேலும் அதிகரித்துள்ளது. பிரதான அருவி, ஐந்தருவி, பழையகுற்றா லம் மற்றும் புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் வெள்ளிக்கிழமை காலை தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள் ளது. இதனால் குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் வெள்ளிக்கிழமை அதிகளவில் சுற்றுலா பயணிகள் குவிந்திருந்த னர்.அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் அவர்கள் குடும் பத்துடன் குளித்து மகிழ்ந்தனர்.