பாபநாசம், ஜூன் 15- எழுத்தாளர் அருந்ததி ராய் மீது உபா சட்டத்தில் வழக்குப் பதிந்து விசாரிக்க அனு மதி அளித்ததற்கு மனிதநேய மக்கள் கட்சி யின் தலைவரும், பாபநாசம் எம்.எல்.ஏ.வு மான பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பிரபல எழுத்தாளரும், சமூக செயற்பாட் டாளருமான அருந்ததி ராய் மீது, உபா சட்டத்தின்கீழ் வழக்குப் பதிந்து விசாரிக்க தில்லி துணைநிலை ஆளுநர் அனுமதி அளித் துள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
2010 ஆம் ஆண்டு அரசியல் கைதிகளை விடுதலை செய்திட வேண்டுமென்று பேசியதற் காக, 14 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது அவர் மீது கொடும் சட்டத்தைப் பிரயோகிப் பது ஒன்றிய அரசின் காழ்ப்புணர்வு எண் ணத்தின் வெளிப்பாடாகும். அருந்ததி ராயோடு, முன்னாள் பேராசிரியர் ஷேக் சவுகத் ஹுசைன் மீதும் வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது.
பல்வேறு தருணங்களில் பாஜகவினரும், சங் பரிவாரத்தினரும் சமூக அமைதியை சீர்குலைக்கும் வகையில் பல்வேறு தரு ணங்களில் பேசியிருக்கின்றனர். அவர்கள் மீதெல்லாம் இதுவரை சாதாரணக் கைது நட வடிக்கை கூட எடுக்கப்படவில்லை. இந்தியா வில் உபா சட்டத்தின்கீழ் கொண்டு வரப்பட்ட 97 சதவீதம் பேர், நீண்ட சிறைவாசத்திற்குப் பிறகு குற்றம் நிரூபிக்கப்படாமல் விடுவிக் கப்பட்டு இருக்கின்றனர்.
கடந்த 2014 ஆம் ஆண்டுக்குப் பிறகு, கருத்துச் சுதந்திரம் பெரிய அளவில் பாதிக்கப் பட்டுள்ளதாகத் தொடர் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. உலக பத்திரிகை சுதந்திர குறி யீட்டில், இந்தியா தொடர் சரிவை சந்தித்து வருகிறது. 180 நாடுகள் கொண்ட பட்டிய லில், இந்தியா இந்தாண்டு 159 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. இந்தியாவில் கருத்துச் சுதந்திரத்திற்கான குரல்வளை நெறிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதற் கான எடுத்துக்காட்டாக இந்த நிகழ்வு அமைந்துள்ளது.
சமூக செயற்பாட்டாளர்களை அச்சுறுத்தும் விதமாக உபா சட்டத்தைப் பயன்படுத்தும் ஒன்றிய அரசுக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். அரசியல் பழி வாங்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியான இந்தச் செயல்பாட்டினை, ஒன்றிய அரசு கை விட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.