districts

img

ஒரு நபர் ஆணைய அறிக்கையை படிக்காமல் விமர்சிப்பதா?

திருநெல்வேலி, ஆக. 11- பள்ளிகளில் சாதிய செயல்பாடுகளைத் தடுப்பது குறித்த ஒரு நபர் ஆணையை படிக்கா மல் அண்ணாமலை போன்றவர்கள் விமர்சிப் பதா என நெல்லையில் நடந்த கருத்தரங்கில் நீதியரசர் சந்துரு கேள்வி எழுப்பினார்.

பாளையங்கோட்டையில் உள்ள நூற்றாண்டு மண்டபத்தில்  தமிழ்நாடு தீண்டாமை  ஒழிப்பு முன்னணி, இந்திய மாணவர் சங்கம் சார்பில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.கிருஷ்ணன் தலைமை தாங்கினார், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில துணை பொதுச்செயலாளர் பி.சுகந்தி, சிபிஎம் மாநி லக்குழு உறுப்பினர் கே.ஜி.பாஸ்கரன், இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் சைலஸ் அருள்ராஜ், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் எம்.சுடலைராஜ் உள்ளிட் டோர் பேசினர்.

இதில் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி நீதி  அரசர் கே.சந்துரு கலந்து கொண்டு பேசிய தாவது: இந்த கூட்டம் நடப்பதற்கு முழுக் கார ணம் மாணவர் சின்னத்துரை தான். சின்னத் துரைக்கு சென்னையில் சிகிச்சை அளித்த; அவரது குடும்பத்தினர் வசிக்க மாற்று  இடம் கொடுத்த முதல்வருக்கு நன்றி. நான்குனேரி போன்று தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரி களில் சாதிய ரீதியான பாகுபாடு சார்ந்த பிரச்ச னைகள் நிலவுகின்றன. இதனை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக  அரசு ஒரு நபர் ஆணை யத்தை அமைத்தது.

ஒன்பது மாத உழைப்பு

இந்த ஆணையம் நான்குனேரி மட்டுமல் லாது தமிழகம் முழுவதும் 9 மாதங்களாக வந்து பார்வையிட்டு அறிக்கையை தமிழக முதல்வரி டம் சமர்ப்பித்துள்ளோம். இந்த அறிக்கை தமிழக முதல்வர் மற்றும் கல்வித்துறை அமைச் சர்கள் படிப்படியாக அமுல்படுத்தப்படும் என  தெரிவித்துள்ளனர். நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மட்டும் இந்த குழு ஆய்வு நடத்தவில்லை; தமிழகம் முழுவதும் நடத்தப் பட்டது. இந்த அறிக்கை சிலருக்கு பிடிக்க வில்லை. எச்.ராஜா இந்த அறிக்கை குறித்து இந்துக்களுக்கு எதிரானது என சொல்கிறார். நீங்கள் அந்த அறிக்கையை படித்தீர்களா என கேட்டால் பத்திரிக்கையாளர்களை வெளியே போ என்கிறார். 

ஒரு மதத்துக்கு எதிரானது எனக் கூறி,  நிராகரிக்க வேண்டும் என்கிறார் அண்ணாமலை. 20 ஆயிரம் புத்தகங்கள் படித்துள்ளேன். எனக்கு யாரும் சொல்லித் தர வேண்டாம் என்பார். உங் களுக்கு வேறு யாரும் கற்றுத்தர முடியாது. தமிழக மக்கள் உங்களுக்கு கற்றுக் கொடுப் பார்கள். இந்த அறிக்கையை எப்படி புத்தக மாக வெளியிட்டார் என புகார் கொடுக்கின்ற னர். சென்னை மாமன்ற உறுப்பினர் ஒருவர் இந்த அறிக்கையை கிழித்துள்ளார். ஆனால் பாஜக தவிர அனைத்து கட்சிகளும் வரவேற்று உள்ளன. கல்வி நிலையங்களில் மோதல் நடந் தால் அனுமதி பெற்றுத் தான் காவல்துறையினர் செல்லவேண்டும் என்பதில்லை; வன்முறை நடந்தால் காவல்துறையினர் யாருடைய அனுமதியும் பெற வேண்டியதில்லை.

குற்றவாளிகளை சமுதாயம் தண்டிக்காத வரை அவர்கள் திருந்தப் போவதில்லை. 

எந்த மதத்திலும் ‘கயிறு’  கட்டச் சொல்லவில்லை 

2019 ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி ஆட்சி யில் தான் பள்ளிகளில் மாணவர்கள் சாதி ரீதி யாக கயிறு கட்டக்கூடாது என  சுற்றறிக்கைவிட்ட னர். நடவடிக்கை இல்லை. ஆனால் தற்போ தும் அது தொடர்கிறது என  நான் கூறினால் நான் மத ரீதியாக அறிக்கை சமர்ப்பித்துள்ளேன் என்கின்றனர்.

2019ஆம் ஆண்டு தில்லியிலிருந்து ஐஏஎஸ் பயிற்சி அதிகாரிகள் திருநெல்வேலிக்கு வந்தனர். அப்போது அவர்கள், பள்ளியில் படிக்கும் கையில் வண்ணக் கயிறு கட்டியிருந்த மாணவர்களிடம் கேட்ட போது சாதிக் கட்சியின் வண்ணக் கயிறு என தெரிவித்தனர்; இதை  அவர்கள் புகாராக தமிழக அரசிடம்  தெரிவித்த னர். இந்த சம்பவத்தைத் தான் தற்போது இந்த ஆணையத்தில் நான் குறிப்பிட்டுள்ளேன். இவ்வாறு நீதிபதி சந்துரு பேசினார்.

பி.சுகந்தி

நீதிபதி சந்துரு தலைமையிலான ‘ஒரு நபர் கமிஷனுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கியதில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியை முதல் பெயராக இந்த ஆணை யம் குறிப்பிட்டது எங்களுக்கு பெருமை. நீதி யரசர் சந்துருவுக்கு எங்களது நன்றி. 600 க்கு மேற்பட்ட பக்கங்கள் இந்த அறிக்கையில் உள்ளன. இதில் 187 ஆவது பக்கத்தில் இருந்து 5 பக்கங்கள் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி தமிழ்நாடு முழுக்க நடத்திய ஆய்வு அறிக்கைகள்  இணைக்கப்பட்டிருக்கின்றன.

குறிப்பாக  441 பள்ளிக்கூடங்களில் தமிழ்நாடு  முழுக்க ஆய்வு நடத்தியதில்  மட்டும்  பட்டி யலின மாணவர்களுக்கு சாதியப் பாகுபாடுகள் தாண்டி, பள்ளிக்கூடங்களில் இருக்கிற ஒவ்வொரு இடமும் அவர்களுக்கு ஒரு பெரிய சவாலாக இருப்பதை காண முடிந்தது. உணவு உண்ணும் இடங்களில் இரண்டு வரிசைகள்; தலித்துக்கு என தனி வரிசை. தலித்துகள் உணவை சமைத்தால் அதை சாப்பிடாத மாண வர்களும் உண்டு. ஆய்வுக்கூடங்களில், விளை யாட்டு மைதானங்களில் பாகுபாடு உள்ளது. 

இந்த ஒரு நபர் அறிக்கையில் உள்ள அம்சங்களை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு சுகந்தி பேசினார்.

மாணவர் பேரவைத் தேர்தல் நடத்துக!

“வகுப்பறைகள் இந்தியாவின் எதிர் காலத்தை தீர்மானிக்கின்றன என்றது கோத்தாரி கமிட்டி அறிக்கை. ஆனால் நமது பள்ளி, கல்லூரி களில் நீண்ட காலமாகவே மாணவர்கள் சாதி அடையாளங்களோடு செயல்படுகின்றனர். சமீப காலங்களில் இது அதிகரித்துள்ளது. நாங்குனேரி சின்னத்துரை சிந்திய ரத்தம் காயும் முன்பே, விஜயநாராயணம் பள்ளியிலும் அதே போன்ற சம்பவம். பெண்கள் பள்ளிகளும் இதில் விதிவிலக்கல்ல.

வெறுப்பு, பாரபட்சம், ஒடுக்குமுறை, மோதல் - இவை ஒரு மோசமான அரசியல் போக்காகும். சீர்திருத்த மற்றும் முற்போக்கு பாரம்பரியம் உள்ள தமிழகத்தில் எதிர்ப்புரட்சி சக்திகளின் செயல்பாடு அதிதரித்துள்ளது. அதன் விளைவுகளே பாரபட்சமும், ஒடுக்கு முறையும். இதற்கு எதிரான மாற்று அரசியலை முன்னெடுக்க வேண்டும். நீதியரசர் சந்துரு அவர்களின் அறிக்கை பல பரிந்துரைகளை முன் வைத்துள்ளது. அதில் முக்கியமானது மாணவர் பேரவைத் தேர்தல்.

பல ஆண்டுகளுக்கு முன்பே உச்சநீதி மன்றம் நியமித்த ஜே.எம். லிங்டோ கமிட்டி  கல்வி நிலையங்களில் பேரவைத் தேர்தல் களை அவசியம் நடத்திட வேண்டும் எனப் பரிந்துரைத்தது. ஆனாலும் பேரவைத் தேர்தல்கள் முறையாக நடப்பதில்லை. ஜன நாயக ஏற்பாடுகள் பள்ளி, கல்லூரிகளில் இல்லை. விவாதங்களும் உரையாடல்களும் மறுக்கப்பட்ட இடமாக கல்வி வளாகங்கள் உள் ளன. இதனை மாற்ற வேண்டும். நீதியரசர் சந்துரு பரிந்துரை செய்துள்ள மாணவர் பேரவைத் தேர்தல் நடப்பதை உறுதி செய்ய வேண்டும்” என சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் கே.ஜி.பாஸ்கரன் பேசினார்.

இந்த கருத்தரங்கில்  பாளையங்கோட்டை தூய இக்னேஷியஸ் கல்வியியல் கல்லூரி முதல்வர் மெடோனா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சி மாவட்ட செயலாளர் க.ஸ்ரீராம், தூய  சவேரியார் கல்லூரியின் துணை முதல்வர் அருள் ரவி, வரலாற்று ஆய்வாளர்  கே.ஏ.மணிக் குமார், இந்திய மாணவர் சங்க மாநிலத் தலை வர் சம்சீர் அகமது, நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் டாக்டர் எஸ்.ராமகுரு, வான்முகில் இயக்குநர் பிரிட்டோ ஆகியோர் பங்கேற்றனர்.