மன்னார்குடி, நவ.17- சிபிஎம் முதுபெரும் தலைவர் தோழர் என். சங்கரய்யா மறைவை யொட்டி திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் கட்சியின் நகரக் குழு மற்றும் ஒன்றியக் குழு சார்பில் அஞ்சலி கூட்டம் நடை பெற்றது. தேரடியில் நடை பெற்ற கூட்டத்திற்கு நகரக் குழு செயலாளர் ஜி.தாயு மானவன் தலைமை வகித் தார். மாவட்டக் குழு உறுப்பி னர் ஆறு பிரகாஷ், மன்னார்குடி நகர்மன்றத் தலைவர் த.சோழராஜன், விசிக ரமணி, திராவிடர் கழ கம் வழக்குரைஞர் சிங்கார வேலு, காங்கிரஸ் குண சேகரன், சிபிஐ மகேந்திரன், மதிமுக மீனாட்சிசுந்தரம், அதிமுக தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் புகழஞ்சலி உரையாற்றினர்.
முன்னதாக நகராட்சி அலுவலகத்தில் இருந்து அஞ்சலி பேரணி புறப்பட்டு, நகரின் முக்கிய வீதிகள் வழியாக தேரடியை வந்த டைந்தது.
நீடாமங்கலத்தில் ஒன்றி யச் செயலாளர் ஜான் கென்னடி தலைமையில் நடைபெற்ற இரங்கல் கூட்டத் தில், கட்சியின் மூத்த தோழர் ப.ரத்தினம், தி.க. மாவட்டச் செயலாளர் கணே சன், காங்கிரஸ் நிரோஷா, சிபிஐ ஒன்றியச் செயலாளர் பாலசுப்பிரமணியன், மாதர் சங்க மாவட்டப் பொரு ளாளர் சுமதி உள்ளிட்டோர் பேசினர். கோட்டூரில் ஒன்றி யச் செயலாளர் எல்.சண்முக வேலு தலைமையில் நடந்த கூட்டத்தில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.என்.முருகானந்தம் புகழஞ்சலி உரையாற்றினார்.