திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தாலுகாவிற்குட்பட்ட கடியாச்சேரி பகுதியில் இஸ்லாமியர்கள் புதிதாக பள்ளிவாசல் ஒன்றை கட்டியுள்ளார்கள். இந்த பள்ளிவாசல் திறப்பு விழா வெள்ளியன்று நடைபெற்ற நிலையில், மதநல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவத்தை பேணும் வகையில் கடியாச்சேரி ஊரைச் சேர்ந்த இந்து, கிறிஸ்தவர்கள் சீர்வரிசையுடன் சென்று பள்ளிவாசல் திறப்பு விழாவில் கலந்து கொண்டனர். சீர்வரிசை பள்ளி வாசலுக்கு வந்தவுடன் தங்கள் உறவினர்களைப் போல ஒருவரை ஒருவர் கட்டி தழுவி அன்பை வெளிப்படுத்தினர்.