திருச்சிராப்பள்ளி,ஜன.27- இந்தியாவின் மாண்புகளை பாதுகாக்க, நாம் போராடிப் பெற்றிருக்கின்ற உரிமை களை, வாழ்வியலை, அரசியல் சாசனத்தை பாதுகாக்க ஒரு மகத்தான போராட்டத்தை நாம் நடத்த வேண்டி உள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி பேசினார். திருச்சி மாவட்டம் சிறுகனூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வெள்ளியன்று வெல்லும் சனநாயகம் எனும் தலைப்பில் மாநாடு நடந்தது.
இதில் பங்கேற்க மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலா ளர் சீத்தாராம் யெச்சூரி விமானம் மூலம் திருச்சி வந்தார். திருச்சி விமான நிலையத்தில் அவருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநகர் மாவட்ட செயலாளர் ஆர்.ராஜா தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப் பட்டது. மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ் ணன், கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பி னர் எம்.சின்னத்துரை, புறநகர் மாவட்டச் செயலாளர் எம்.ஜெயசீலன், மாநகர் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ரெங்கராஜன், வெற்றிச்செல்வன், லெனின், மணிமாறன் மற்றும் மாவட்டக்குழு உறுப்பினர்கள், பகுதி செயலாளர்கள், கட்சி உறுப்பினர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பின்னர் மாநாட்டில் கலந்து கொள்ள காரில் சென்ற சீத்தாராம் யெச்சூரிக்கு சமய புரம் பனமங்கலம் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புறநகர் மாவட்டக்குழு சார்பில் மண்ணச்சநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் கனகராஜ் தலைமையில் வாண வேடிக்கை, மேளதாளத்துடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் அங்கி ருந்து 100 இருசக்கர வாகனங்கள், 50 ஆட்டோக்கள் அணிவகுக்க ஊர்வலமாக புறப்பட்டு சமயபுரம் நால் ரோடு பகுதியை சென்றடைந்தனர். பின்னர் அங்கு நடந்த வரவேற்புக் கூட்டத்திற்கு எம். ஜெயசீலன் தலைமை வகித்தார். கூட்டத்தில் சீத்தாராம் யெச்சூரி பேசியதாவது : இந்தியாவில் இன்று மிகப்பெரிய ஒரு போராட்டத்தை துவக்கி உள்ளோம். அந்த போராட்டத்தில் தமிழ்நாட்டு மக்களுக்கு பெரிய பங்கும், பாத்திரமும் இருக்கிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் இருக்கின்ற மதச்சார்பற்ற, ஜனநாயக சக்திகளோடு இணைந்து பணியாற்றுகின்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மகத்தான பொறுப்பு, பங்களிப்பு இருக்கின்றது.
இந்தியாவின் மாண்புகளை பாதுகாக்க, நாம் போராடி பெற்றிருக்கின்ற உரிமைகளை, வாழ்வி யலை, அரசியல் சாசனத்தை பாதுகாக்க ஒரு மகத்தான போராட்டத்தை நாம் நடத்த வேண்டி இருக்கின்றது. அந்த போராட்டத்தில் ஒரு மகத்தான வெற்றியை பெற வேண்டும் என்ற நம்பிக்கையோடு நாம் பயணிக்கின் றோம். நான் நிச்சயமாக நம்புகின்றேன், தமிழ்நாட்டில் கடந்த தேர்தலை போல பாஜகவுக்கோ, அதனுடைய கூட்டணி கட்சிக ளுக்கோ ஒரு நாடாளுமன்ற சீட்டுக்கூட இல்லாமல் அனைத்து நாடாளுமன்ற தொகுதிகளிலும் கடந்த தேர்தலை போல நமது அணி மகத்தான வெற்றிபெற இந்த போராட்டத்தை நீங்கள் நடத்துவீர்கள் என்ற நம்பிக்கை இருக்கின்றது.
இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் மதுரை நாடாளுமன்ற உறுப்பி னர் சு.வெங்கடேசன், கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னத்துரை, மூத்த தோழர் கே.வி.எஸ்.இந்துராஜ், பெரம்ப லூர் மாவட்டச் செயலாளர் ரமேஷ்குமார், திருச்சி புறநகர் மாவட்ட ஒன்றிய செயலாளர் கள், மாவட்டசெயற்குழு உறுப்பினர்கள், மாவட்டக்குழு உறுப்பினர்கள், இடைக்கமிட்டி செயலாளர்கள், இடைக்கமிட்டி உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.