districts

img

செந்தலைப்பட்டினம் ஊராட்சியில் ரூ.10 லட்சம் மதிப்பில் சாலைப் பணி

தஞ்சாவூர், மே 28-  

    தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஒன்றியம், செந்தலைப்பட்டினம் ஊராட்சி யில், ரூ.10 லட்சம் மதிப்பீட்டில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலி ருந்து, சாலை மேம்பாட்டு பணிகள் தொடங்க  உள்ளன.  இதற்கான அடிக்கல் நாட்டு விழா ஊராட்சி  மன்ற தலைவர் ரஹ்மத்துல்லா தலைமை யில் நடைபெற்றது.

     ஒன்றியக் குழு தலை வர் மு.கி.முத்துமாணிக்கம் முன்னிலை வகித்தார். பேராவூரணி சட்டமன்ற உறுப்பி னர் என்.அசோக்குமார் சாலை  அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.  நிகழ்ச்சியில், வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, சேதுபாவா சத்திரம் திமுக தெற்கு ஒன்றியச் செயலா ளர் வை.ரவிச்சந்திரன், திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினரும், தலைமைக் கழக பேச்சாளருமான அ.அப்துல்மஜீத், பூமிநாதன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சையது முகமது, சாகுல்கமீது, பாமா செந்தில், ஒப்பந்ததாரர் பைங்கால் ஞான பண்டிதன் மற்றும் கிராமத்தினர், ஜமாத்தார்கள் கலந்து கொண்டனர்.

    இதேபோல், பேராவூரணி ஊராட்சி ஒன்றி யம், ஒட்டங்காடு ஊராட்சி, மதன்பட்டவூர் நல்லமான் புஞ்சையில் சட்டமன்ற உறுப்பி னர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து சுமார் ரூ.16.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய நியாய விலை கட்டட பணிக்கு அடிக்கல் நாட்டி, விழாவை சட்டமன்ற உறுப்பினர் என்.அசோக்குமார் தொடங்கி வைத்தார்.