districts

சாலைப் பணியை முடிக்காததால் ரிலையன்ஸ் நிறுவன ஒப்பந்தம் ரத்து

பாபநாசம், நவ.29 - தஞ்சாவூர் - விக்கிரவாண்டி தேசிய  நெடுஞ்சாலையில், எஞ்சியப் பணியை மேற்கொள்ள வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், இதற்கென சேத்தியாத்தோப்பு - விக்கிரவாண்டி இடையே ரூ.921.76 கோடிக்கு புதிய ஒப்பந்தம் கோரப் பட்டுள்ளதாக தெரிய வருகிறது.  தஞ்சாவூர் - விக்கிரவாண்டி இடையே புதிய புறவழிச்சாலை (என்.எச்.45 சி) 164.28 கிலோ மீட்டர்  தூரம் சாலை அமைக்கும் பணி  கடந்த 2018 ஆம் ஆண்டு தொடங்கி யது. இதற்காக மூன்று தொகுப்பு களாக பிரிக்கப்பட்டு, தனியார் நிறு வனங்களிடம் சாலை போடும் பணி ஒப்படைக்கப்பட்டது. அதன்படி தஞ்சாவூர் - சோழ புரம் இடையே 47.84 கி.மீட்டர் தூரம்  ஒரு தொகுப்பாகவும், சோழபுரம் -  சேத்தியாதோப்பு இடையே 50.48  கி.மீட்டர் தூரம் மற்றொரு தொகுப் பாகவும் என இரு தொகுப்புகளும் படேல் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டன. சேத்தியாதோப்பு -  விக்கிரவாண்டி இடையே 65.96 கி.மீட்டர்  தூரம் ஒரு தொகுப்பாகவும் பிரிக்கப் பட்டு ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது. இந்நிலையில் படேல் நிறுவனம்  ஒப்பந்தம் எடுத்த இரு தொகுப்பு களுக்கான சாலைப் பணியை சுமார் 90 சதவீதம் முடித்த நிலையில், ரிலை யன்ஸ் நிறுவனம் தான் எடுத்த ஒப்பந்தப் பணியில் 45 சதவீதத்தை கடந்த  நிலையில், பணியில் பெரும் தொய்வு ஏற்பட்டது. இதனால் ஒப்பந்தத்தை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கடந்த சில மாதங்களுக்கு முன் ரத்து செய்தது. இதற்கிடையில் மத்திய சாலை  போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்  துறை அமைச்சர் நிதின்கட்கரி கடந்த செப்.13 அன்று கும்பகோணம் பகுதிக்கு நேரில் வந்து, தஞ்சாவூர் - விக்கிரவாண்டி சாலைப் பணியின் முன்னேற்றம் குறித்த ஆய்வை மேற் கொண்டார். இதையடுத்து சேத்தியா தோப்பு - விக்கிரவாண்டி இடையே தொய்வடைந்துள்ள சாலைப் பணியை  மீண்டும் செயல்படுத்த ஏதுவாக தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் சார்பில் புதிய ஒப்பந்தம் கோரப் பட்டுள்ளது. அதன்படி இரண்டு ஆண்டுகளில் இந்த பணியை ஒப்படைக்க வேண்டும்.  5 ஆண்டுகள் சாலையை பராமரிக்க வேண்டும். ரூ.921.76 கோடியில் 65.96  கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலையின் எஞ்சியப் பணியை மேற்கொள்ள வேண்டும் என ஒப்பந்தம் கோரி யுள்ளதாக தெரிய வருகிறது.  இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலை  ஆணையத்தின் அதிகாரிகள் கூறுகையில், “தஞ்சாவூர் – விக்கிர வாண்டி புதிய சாலை அமைக்கும் பணி மூன்று தொகுப்பாக வழங்கப் பட்டதில், இரு தொகுப்புகளின் பணி பெரும்பகுதி நிறைவடைந்துள்ள நிலையில், மீதமுள்ள ஒரு தொகுப்பு 45 சதவீதம் மட்டுமே நிறைவடைந் துள்ளது. இதனால், அந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு, மீண்டும் புதிய ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. புதிய ஒப்பந்தம் வழங்கப்பட்ட பின் அந்தப் பணிகள் விரைவுபடுத்தப்படும்” என்றனர்.