தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே பூண்டி கல்லூரியில் ஆக.30 அன்று மண்டல அளவிலான வட்டெறிதல் போட்டி நடைபெற்றது. இதில் பாபநாசத்தைச் சேர்ந்த பட்டுக்கோட்டை அழகிரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் தரணிதரன் முதலிடம் பெற்றார். வெற்றி பெற்ற மாணவர் தரணிதரனை பள்ளித் தலைமையாசிரியர் தீபக் உட்பட ஆசிரியர்கள் பாராட்டினர்.